உதகை, செப்.30- பந்தலூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர், இந் திரா நகர் பகுதியில் அடிப்படை வசதி கள் ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியு றுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் பந்தலூர் பழைய பேருந்து நிலை யம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சிபிஎம் பந்தலூர் கிளை சார்பில், கிளைச் செயலாளர் பெரியார் மணிகண் டன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவாலா கிளைச் செய லாளர் ஹசைன் வரவேற்றார். மாவட் டக்குழு உறப்பினர் வர்கீஸ், ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ், வாலிபர் சங்க ஏரியா கமிட்டி செயலாளர் ராசி ரவிக்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற் றினர். முடிவில், ஊர்வலமாக சென்று நெல்லியாளம் நகராட்சி ஆணையாளரி டம் மனு அளித்தனர். அம்மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணை யர், அடிப்படை வசதிகளை 15 நாட்க ளுக்குள் செய்து தருகிறேன் என்று உறுதியளித்தார்.