districts

img

மோடியின் நிகழ்வில் குழந்தைகள் நடவடிக்கைக் கோரி சிபிஎம் மனு

மோடியின் நிகழ்வில் குழந்தைகள் நடவடிக்கைக் கோரி சிபிஎம் மனு கோவை, மார்ச் 20- கோவையில் மோடி பங் கேற்ற ரோடு ஷோ நிகழ் வில், பள்ளி குழந்தைகளை பங்கேற்க வைத்த விவகா ரத்தில், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், மாவட்டக்குழு உறுப் பினர் மூர்த்தி ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலாவிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது,  கடந்த 15 ஆம் தேதியன்று கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை வாகனத்தில் துவக்கி னார். அச்சமயம் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த  மாணவ, மாணவிகள் பாஜக தேர்தல் சின்ன அடை யாளங்களுடன் பங்கேற்க வைக்கப்பட்டிருக்கி றார்கள். இது இந்திய தேர்தல் ஆணையத்தின் வழி காட்டும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமான தாகும். எனவே, இதற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதோடு எதிர்காலத்தில் பள்ளிக்குழந்தை களை அரசியல் பணிகளுக்கு ஈடுபடுத்துவதை முழு மையாக தடை செய்ய வேண்டும் எனவும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.