districts

img

பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் முற்றுகை

தருமபுரி, மே 30- ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி யின மக்களுக்கு அடிப்படை வச திகள் செய்து தர வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன் றியம், அஜ்ஜனள்ளி ஊராட்சி, வீரப்பன் கொட்டாயில் சுமார் 25க் கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள்  வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு அப்ப குதி பொதுமக்கள் பலமுறை அதி காரிகளிடம் முறையிட்டனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் சுஞ்சலநத்தம் ஊராட்சி, மூலபெள் ளூர் பகுதியில் சுமார் 30க்கும் மேற் பட்ட பழங்குடியின மக்கள் வசித்து  வருகின்றனர். தற்போது பழங்குடி யினர் துறையின் சார்பில் தொகுப்பு  வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. ஆனால், போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படாததால் பழங்குடியின மக்கள் பெரும் சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, விரைந்து குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து தர  வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமையில் பழங்குடியின மக்கள் காலிக்குடங்களுடன் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து வளர்ச்சி  அலுவலர் விமலன், போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டு, உடனடி யாக அதற்கான அடிப்படை வசதி கள் செய்துத்தரப்படும் என உறு தியளித்தார். அதன்பேரில் போராட் டக்காரர்கள் அனைவரும் கலைந்து  சென்றனர். முன்னதாக, இப்போ ராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின்  ஏரியூர் ஒன்றியச் செயலாளர் என்.பி.முருகன் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.மாதன், மாவட் டக்குழு உறுப்பினர் ஆ.ஜீவானந் தம், நாகமரை முன்னாள் ஊராட்சி  மன்றத் தலைவர் என்.பி.இளங்கோ வன், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.தங்கராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

;