பொள்ளாச்சி, செப்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பரசன் தலைமையில் பாஜகவை அப் புறப்படுத்துவோம் என்ற பிரச்சார இயக்கம் பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட 9 மையங்களில் நடைபெற்றது. முன்ன தாக, பொள்ளாச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தின் மாநில கழக வெளியீட்டு செயலா ளர் இரா.மனோகரன் துவக்கி வைத்தார். இந்த பிரச்சார இயக்கத்தில் சிஐடியு நிர்வாகிகள் மனோகரன், கே.மகாலிங் கம், அங்கமுத்து, வாலிபர் சங்க தாலுகா தலைவர் ரமேஷ்கண் ணன், செயலாளர் மணியாழன், பொருளாளர் அழகர், மாதர் சங்கத்தின் பொறுப்பாளர் சித்ரா, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் நிசார் அகமது உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.