districts

img

சொத்துவரி உயர்வை திரும்பப் பெற தீர்மானம்  நிறைவேற்றக் கோரி சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அவிநாசி, டிச.16 – திருமுருகன்பூண்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெறத் தீர் மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நகர்மன்றக்  கூட்டத்தில் சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தீர்மானத்தை நிறை வேற்றாமல் நகர்மன்றக் கூட்டம் ஒத்தி வைக் கப்பட்டது. திருமுருகன் பூண்டி நகர்மன்றக் கூட்டம்  திங்களன்று நகர்மன்றத் தலைவர் குமார்  தலைமையில், துணைத்தலைவர் ராஜேஸ் வரி, பொறுப்பு நகராட்சி ஆணையர் பால்ராஜ்  முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கியபோது, வார்டுகளில் எந்த வேலையும் நடைபெறவில்லை என்று கூறி  திமுகவை சேர்ந்த ஒன்பது நகரமன்ற உறுப்பி னர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேர்,  சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வலியு றுத்தி நெத்தியில் பட்டை நாமம் இட்டு திரு வோடு ஏந்தி வந்து வலியுறுத்தினர். பின்னர்  தண்ணீர் குழாய் பதித்ததில் தரமில்லாத குழாய் பதித்துள்ளதன் மீது விசாரணை நடத்த  வேண்டும், சொத்து வரி உயர்வைத் திரும்பப்  பெற வேண்டும் என முழக்கமிட்டு வெளிந டப்புச் செய்தனர். திமுக, அதிமுக உறுப்பினர்கள் வெளியே றிய நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் இரு வர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறு பேர்  மற்றும் நகர்மன்றத் தலைவர் குமார் உள் ளிட்ட மொத்தம் 9 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். இந்நிலையில், மூன்றில் ஒரு பங்கு உறுப் பினர்கள் கூட்டத்தில் இருப்பதால், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என  வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என்று இரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்களும் நகர்மன்றத் தலைவர் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆணையர் இப்பிரச் சனையில் தீர்மானம் நிறைவேற்ற ஒத்துழைக் காத நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சி கவுன் சிலர்களும் சொத்து வரி உயர்வை திரும்பப்  பெறக் கோரி முழக்கம் எழுப்பிக் கொண்டு வெளிநடப்புச் செய்தனர். மற்ற மன்றப் பொருட்களில் தீர்மானங்கள்  நிறைவேற்ற வேண்டிய நிலையில், தலைவர்  மீண்டும் கூட்ட அரங்கத்திற்கு வருமாறு நகர் மன்ற உறுப்பினர்களை அழைத்தார். மீண் டும் கூட்ட அரங்கிற்கு வந்த இரு கம்யூனிஸ்ட்  கட்சி நகர்மன்ற உறுப்பினர்களும், சொத்து வரியைத் திரும்பப் பெறும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்தியதுடன், தங்கள் கருத்துகளை கூட்ட  மினிட் நோட்டில் பதிவு செய்ய வேண்டும் என் றும் கூறினர்.  இந்நிலையில் நகராட்சி ஆணையர், நகர் மன்றத் தலைவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதோ கூறினார். இதையடுத்து, இரண்டு வாரங்கள் கழித்து கூட்டம் நடத்தி தீர்மானங் கள் நிறைவேற்றலாம் எனக்கூறி விட்டு,  கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்து  நகர்மன்றத் தலைவர் குமார் வெளியேறி னார்.