திருப்பூர், செப்.10 - பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவம னையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட் பட்ட கிளை மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட் பட்ட கட்சி கிளை மாநாடுகள் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 1 மற்றும் 8 ஆகிய தேதிக ளில் நடைபெற்றன. இந்த மாநாடுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், ஆர். மைதிலி, வே.தூயவன், ஆ.சிகாமணி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாடுகளில் தேர்ந்தெடுக் கப்பட்ட கிளைச்செயலாளர்கள் வருமாறு: பெருமாநல்லூர் ஏ - ஜி.சண்முகம், பெருமாநல்லூர் பி - எம்.கே.கோவிந்த சாமி, பெருமாநல்லூர் சி - தேவராஜ், ஈட் டிவீரம்பாளையம் - கே.சுப்பிரமணி, கணக்கம்பாளையம் (வடக்கு) - ஜெ. செல்வநாதன், கணக்கம்பாளையம் - எம்.வெள்ளியங்கிரி, காளிபாளையம் - கே.பட்டுச்சாமி, பள்ளிபாளையம் - பி.சுரேஷ்குமார், காளம்பாளையம் - விஸ்வநாதன், ஏவிபி லேஅவுட் - பி. நரேந்திர பிரசாத், அவனாசிகவுண்டம் பாளையம் - பி.கதிர்வேல், அவினாசிக வுண்டம்பாளையம் மாதர் - கே.வசந்தி, ஏ.எஸ்.எம் காலனி - எஸ்.ராஜேஷ், அங் கேரிபாளையம் - என்.மனோகர், வெங் கமேடு ஏ - எம்.எஸ்.வேலுசாமி, ஆத்துப் பாளையம் - டி.அய்யாசாமி, ஆத்துப்பா ளையம் மாதர் - ஏ.கீதாலட்சுமி, செட்டி பாளையம் - டி.கமலக்கண்ணன், விஜய புரி கார்டன் - எம்.மனோகர், பாண்டியன் நகர் கட்டுமானம் - சுப்பிரமணி, குருவா யூரப்பன் நகர் (போ) மாதர் - கே.எஸ்.கற் பகம், தோட்டத்துபாளையம் - இ.மங்க லட்சுமி, தோட்டத்துபாளையம் (மாதர்) - சுமதி, சமத்துவபுரம் - சி.பிரான்சிஸ், வாவிபாளையம் - ஆர்.சுப்பிரமணி, குரு வாயூரப்பன் நகர் (சே) - எம்.சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். இந்த மாநாடுகளில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: சமத்து வபுரம் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று வருடங்களுக்கு மொத்தமாக வரி வசூல் செய்வதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை நிர் வாகம், புதிய பஸ் நிலையம் முதல் பெருமாநல்லூர் வரை பழுது அடைந் துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். வடக்கு ஒன்றிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்க ளில் குடியிருக்கும் மக்களுக்கு இல வச வீட்டு மனை பட்டா வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட அந்தந்த பகுதி கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டன. வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர். காளியப்பன் இத்தகவலை தெரிவித்தார்.