districts

img

கஞ்சா விற்பனை செய்த தம்பதி கைது

ஈரோடு, ஏப்.25- புஞ்சை புளியம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த  தம்பதியினர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட் டனர். புஞ்சை புளியம்பட்டி பனையம்பள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் அப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங் குள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப் அலி (26), அவரது மனைவி ஜூலைக்கான்கத் தூண் (22) ஆகியோர் பனையம்பள்ளி யில் இருந்து தேசிபாளையம் செல்லும் சாலையில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து அவர்கள் விற்ப னைக்காக வைத்து இருந்த 2 கிலோ கஞ்சா பொட்ட லங்களை  பறிமுதல் செய்தனர். பின்னர், சத்தியமங்கலம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்த னர்.