சேலம், ஜன.3- கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத் தில் ஞாயிறன்று நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.2 கோடியே 25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் வேளாண் கூட்டு றவு விற்பனை மையத்தில் ஞாயிறன்று பருத்தி ஏலம் நடை பெற்றது. இந்த பொது ஏலத்திற்கு 5,500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். பருத்தி மூட்டைகள் 1,400 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அலுவ லர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பிடி ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,700 முதல் ரூ.10,580 வரையில் விற்பனையானது. டிசிஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ.11,550 முதல் ரூ.15,591 வரை விலைபோனது. இதில் மொத்தம் ரூ.2 கோடியே 25 லட்சத் துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றதாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.