சேலம், அக்.4- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத் தின் மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்டப் பொரு ளாளர் இருசப்பன், மாவட்டத் துணைத்தலைவர்கள் குமார், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ராஜமாணிக்கம் செய்தியாளர்களி டம் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளில் தமிழ்நாடு முழு வதும் 18 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 7 ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதால், பணிச்சுமை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்த கடன் தள்ளுபடி நடவடிக்கையில், அதற்கான வர வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. மேலும் ஊழி யர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலையில், விவ சாய உபகரணங்களை வாங்க தொடர்ந்து வற்புறுத்தி வருவ தால் சங்கங்கள் செயல்பட முடியாத அபாயம் ஏற்படும். எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.