districts

img

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக

கோவை, டிச.14- கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோவையில் சிஐடியு கட்டு மான தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டு கைதாகினர்.  பெண்களுக்கு 55 வயதில் பென் சன் வழங்க வேண்டும். நலவாரிய ஆன்லைன் பதிவை எளிதாக்க வேண்டும். கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் பணியிடத்தில் பெண்களுக்கான கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர் களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயி ரம் வழங்க வேண்டும். இயற்கை மர ணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை காந்திபுரத்தில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தி னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் முருகையா தலைமை வகித்தார். இதில், சிஐ டியு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட  பொதுச்செயலாளர் கே. மனோகரன், சிஐடியு மாவட்ட தலை வர் சி.பத்மநாபன், மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.

;