districts

img

காரப்பாடி மலைக் கிராமத்தில் வீடு கட்டும் பணி தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தருமபுரி, ஜூன் 12- அரூர் வட்டம் காரப்பாடி மலைக் கிரா மத்தில் ரூ.1.44 கோடியில் வீடு மற்றும் கழிப் பறை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி‌நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமமான காரப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது.  48 வீடுகள் மற்றும் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து மலைவாழ் மக்க ளிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வாழ்க்கை தரம் உயர்வதற்கும் மிக முக்கியமான ஒன்று கல்வி மற்றொன்று ஆரோக்கியம். ஆண், பெண் என்கிற பாகுபாடின்றி அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். உலகில் ஒருவரிடமிருந்து அழிக்க முடியாத செல்வம் எது என்றால் அது கல்வி ஒன்று மட்டுமே. உங்கள் குழந்தைகள் அனைவரையும் கட் டாயம் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இப்பகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களை கண்டறிந்து வருவாய் துறையின் மூலம் ஆய்வு செய்து தகுதியான அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.  இந்த ஆய்வின் போது, அரூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.விஸ்வநாதன், பழங்கு டியினர் நல மாவட்டத் திட்ட அலுவலர் கதிர் சங்கர், அரூர் வருவாய் வட்டாட்சியர் கனி மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் இர விச்சந்திரன், சிட்லிங் ஊராட்சி மன்ற தலை வர் வி.மாதேஸ்வரி, துணைத் தலைவர் பி.வேலாயுதம் உள்ளிட்ட துறைசார்ந்த அலு வலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.