கோவை, மார்ச். 21- வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களின் வாக்காளர் அடை யாள அட்டை உள்ளிட்ட விவரங் களை சேகரிக்கும் தமிழக ஆளுநர் ரவி மற்றும் துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட தேர்தல் நடத் தும் அலுவலர் கிராந்திகுமார் பாடி யிடம் திராவிடர் பண்பாட்டுக் கூட்டி யக்கத்தை சேர்ந்தோர் புகார் அளித் துள்ளனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தில் பயிலும் மாணவ, மாணவி யரிடம் வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், தொலை பேசி எண் மற்றும் பெற்றோரின் வரு வாய் உள்ளிட்ட பல்வேறு விவரங் கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதால் இவை சேகரிக்கப்படுவதாக மாண வர்களிடம் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் திராவிடர் பண்பாட் டுக் கூட்டியக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் வழக்கறிஞர் வெண் மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.கரீம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங் கத்தின் செயலாளர் ஜோதிகுமார், புரட்சிகர இளைஞர் முன்னணியின் நிர்வாகி மலரவன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் உத்தரவின் பெயரில் மாணவர்களிடம் இந்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும், இது தேர் தல் விதிமுறை மீறல் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் வேளாண் பல்கலைகழக துணை வேந்தர் கீதாலட்சுமி மற்றும் துறை தலைவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஆட் சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். கல்வி பாதிக்கப்படுமோ என்கிற அச்சத்தால், இதுகுறித்து கேள்வி எழுப்ப மாணவர்கள் அச்சப்படு கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, செல் பேசி எண், பெற்றோர்கள் விப ரம் உள்ளிட்ட விபரங்களை கேட் பது, மாணவர்களின் தனியுரிமை, பாதுகாப்பு கேள்விக்குள்ளா கியுள்ளது. ஏற்கனவே தமிழகத் தின் பிற பகுதியில் பல்கலைக்க ழகங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்மொழி உத்தரவு வழங்கப் பட்டு பின்னர், அது திரும்ப பெற் றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை பொறுத்த வரை தற்பொழுது வரை மாணவ, மாணவியரிடம் வாக்கா ளர் அட்டை எண் மற்றும் தொலை பேசி எண்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆளுநர் ரவி அப்பட்டமாக ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார் என்பது அப்பட்ட மாக தெரிகிறது. இந்நிலையில், மாணவர்களின் வாக்காளர் அடை யாள அட்டை உள்ளிட்ட ஆவணங் களை கேட்பது சந்தேகத்தை ஏற்ப டுத்துகிறது. மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் வலுத்து வருகிற நிலையில், மாணவர்களிடம் தனிப்பட்ட விவரங்களை சேகரிப் பது மேலும் சந்தேகத்தை உறுதிப்ப டுத்துகிறது. எனவே, தமிழக ஆளு நர் ரவி ,மற்றும் துணை வேந்தர் கீதா லட்சுமி, துறைத்தலைவர்கள், பதிவாளர் உள்ளிட்டோர் மீது தேர் தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கடந்த வாரம் இதே போன்று சர்ச்சை ஏற்பட்ட பொழுது கவர்னர் அலுவலகத்தில் இருந்து இது போன்ற எந்த உத்தரவும் தெரிவிக் கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நி லையில் தற்போது மீண்டும் வேளாண்மை பல்கலை கழக மாண வர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை எண், தொலைபேசி எண் போன்றவை சேகரிக்கப்படுவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஹேக் செய்யப்பட்டுவிட்டது: துணைவேந்தர் இது தொடர்பாக துணைவேந் தர் வெ.கீதாலட்சுமி கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவர்களுக்கான கல்வி உத வித் தொகை அவரவர்களின் வங் கிக் கணக்கிற்கே செல்ல வேண் டும் என்பதற்காக ஒரு லிங்க் கொடுத்து அதில் தனிப்பட்ட விவ ரங்களை நிரப்பச் சொல்லியி ருந்தோம். அதை வேறு யாரும் பார்க்க முடியாது. அதை யாரோ சிலர் ஹேக் செய்து, அதில் இரண்டு புதிய விவரங்களை சேர்ப்பதற்காக இடம் ஒதுக்கியுள்ளனர். நான் கடந்த 4 நாள்களாக வெளியூரில் இருக்கிறேன். கோவை வந்ததும் அது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றார்.