திருப்பூர், பிப். 22 – மோடி பல்லடத்திற்கு வருவதை முன் னிட்டு பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் மிரட்டி கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வியா பாரிகள், பொதுமக்கள் புகார் கூறுகின்ற னர். பாஜகவினரின் மிரட்டல் வசூல் குறித்து கடைக்காரர் மற்றும் பெண் ஒருவர் பேசும் வைரல் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் தொரவலூர் பகுதியில் பாஜகவினர் அப்பகுதி கடைகளில் வசூலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு பெண் நடத்திய சிறு கடையில், மோடி வரு கிறார், எனவே ரூ.500 கொடு! என்று கேட்டதா கவும், அதற்கு அந்த பெண் கடைக்காரர் இல்லை என பதில் கூறியிருக்கிறார். ஆனால் கடைக்காரர் போன் நம்பரைக் கொடு நாங்கள் பேசுகிறோம் என்று விடாமல் பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல் ரூ.20-ஐ பாஜகவினரிடம் அந்த பெண் தந்தி ருக்கிறார். ஆனால் இதை வாங்க மறுத்த பாஜகவினர், நாங்கள் என்ன பிச்சைக்காரர் களா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி யுள்ளனர். இதேபோல் அருகாமையில் இருந்த கடைகளிலும் தலைவர் வருகிறார், ரூ.500 கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்ப டுத்தியுள்ளனர். பாஜகவினர் மிரட்டி பணம் வசூலித்ததை கடைக்காரர்கள் உறுதிப்படுத் தினாலும், அதை வெளியே சொன்னால் தங்க ளுக்கு பாதிப்பு வரும் என்று அஞ்சி வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என தெரிவித் துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் கடை நடத்தும் வேறொரு பெண் நடந்த சம்ப வத்தை உறுதிப்படுத்தி வீடியோ வெளியிட்டி ருக்கிறார். இந்த மிரட்டல் வசூல் குறித்து பாஜக நிர்வாகி முருகானந்தம் என்பவரிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “எதிர்க் கட்சிகள் சதி!” என்று கூறியிருக்கிறார். தேர்தல் பத்திரம் மூலம் நிதி வசூல் செய்த விவகாரத்தில் பெரு நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறையை ஏவிய பிறகு பாஜக விற்கு ரூ.300 கோடிக்கு மேல் அந்த பெரு நிறுவனங்கள் நிதி வழங்கியதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. பெரு நிறுவ னங்கள் தொடங்கி, சின்னஞ்சிறு பெட்டிக்க டைக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பி னரையும் மிரட்டி பணம் வசூலிப்பதை மேற்படி சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.