அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் மீது ஆட்சியரிடம் புகார்
ஈரோடு, மே 30- ஓய்வு பெற்ற ஊழியர்களின் பண பலனை வழங்காமல் திருடிய அரசு போக்கு வரத்து கழக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் புகார் மனு அளித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங் காமல் நிர்வாகம் வஞ்சித்து வருகிறது. இந் நிலையில் ஏ.ஆனந்தன், எம்.பெரியசாமி ஆகியோர் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பிஎப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்கா ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் வட்டியு டன் 12 தவணைகளில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிர்வாகம் மதிக்காத நிலையில் அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. அதன்மீது இரண்டு தவணைக ளில் 6 விழுக்காடு வட்டியுடன் தர வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 9 விழுக்காடு வட்டியும் தர வேண்டுமென தீர்ப்பளிக்கப் பட்டது.இதையும் கடந்த 6 ஆண்டுகளாக போக்குவரத்து கழக நிர்வாகம் நிறை வேற்றவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் உயர் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல், மோசடி செய்துள்ளனர். எங்கள் பணத்தை திருடியுள்ளனர். ஆகவே, அவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதுடன் எங்கள் பணத்தை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழி லாளர்கள் மனு அளித்தனர்.
ஈரோடு: அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்கள்
ஈரோடு, மே 30- ஈரோடு மாநகர் பகுதியில் சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒரு வாரத்தில் வழிப்பறிகள், வீடு புகுந்து திருட்டு உள்ளிட்டவை அன்றாட நிகழ்வாக மாறி யுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், போலீசாருக்கு சவால் விடும் வகையில் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தொடர் குற்றநிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 26 ஆம் தேதி 2 வழிப்பறிகள் அடுத்தடுத்து நிகழ்ந்தது மிகப்பெ ரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில தினங்க ளுக்கு முன்பு வீடு புகுந்து திருடும் சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. இது மேலும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே உடனடியாக போலீசார் இரவு நேர ரோந்தை அதிகப்படுத்தவும், விரைவாக நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலிபர் போக்சோவில் கைது
இளம்பிள்ளை, மே 30- சேலம் மாவட்டம் இளம் பிள்ளை, மோட்டூர், பகுதி யைச் சேர்ந்த அரசு பள்ளி யில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியிடம், இளம் பிள்ளை அருகே உள்ள தாடி காரனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தியாக ராஜன் (29) என்ற வாலிபர் திருமணம் செய்துகொள்வ தாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து உள்ளார். இந்நிலையில், இது குறித்து சிறுமியின் தாயார் சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத் தின் கீழ் தியாகராஜனை கைது செய்து, நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை மாநாடுகள்
நாமக்கல், மே 30- தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம், தட்டாங் குட்டை ஊராட்சி, உப்புக்குளம் பாலிப் பாறை பகுதி கிளை மாநாடு ஏ.காளியண் ணன் தலைமையில் நடைபெற்றது. இம்மா நாட்டில் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், பள்ளிபாளையம் வடக்கு விவசாய ஒன்றிய செயலாளர் எம். தனேந்திரன் ஆகியோர் பங் கேற்றனர். தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது. இதில், தலைவராக சரவணன், உதவித்தலைவராக எம்.செங்கோட்டு வேல், செயலாளராக தங்கராசு, உதவி செய லாளராக கே.சரவணன், பொருளராக ஏ. காளியண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். திருச்செங்கோடு ஒன்றியம் மொளசி கிளை மாநாடு மாவட்ட செயலாளர் பி.பெரு மாள், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் கே.பூபதி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகி தேர் வில் தலைவராக கே.பூபதி, உதவி தலை வராக எஸ்.வடிவேல், செயலாளராக செந் தில், உதவி செயலாளராக எஸ்.விஸ்வநா தன், பொருளாளராக ஆர்.குமாரசாமி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ரூ.9.75 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
ஈரோடு, மே 30- அந்தியூர் புதுப்பாளை யம் வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடை பெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப் பூர், சென்னம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,508 வாழைத்தார் கள் கொண்டு வரப்பட்டன. இதில், கதலி ரூ.40க்கும், நேந்திரம் ரூ.46க்கும் ஏலம் போனது. செவ்வாழை (தார்) ரூ.650க்கும், ரஸ்தாளி ரூ.520க்கும், மொந்தன் ரூ.420க்கும், தேன்வாழை ரூ.510க்கும், ரொபஸ்டா ரூ.320க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்துக்கு வாழைத்தார் கள் விற்பனை செய்யப்பட் டன. ஈரோடு, பெருந்துறை, கோபி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார் களை ஏலம் எடுத்து சென்ற னர். இதேபோல், கோபி வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத் துக்கு 3 ஆயிரத்து 190 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதில் கதலி (கிலோ) ரூ.46க்கும், நேந்தி ரன் ரூ.41க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ. 500க்கும், தேன்வாழை ரூ. 580க்கும், பச்சை நாடன் ரூ. 340க்கும், மொந்தன் ரூ. 390க்கும், ரொபஸ்டா ரூ. 410க்கும், ரஸ்தாளி ரூ. 510க்கும், செவ்வாழை ரூ. 730க்கும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 83 ஆயிரத்துக்கு வாழைத்தார் கள் விற்பனை செய்யப்பட் டன. தேங்காய் 3 ஆயிரத்து 740 கொண்டு வரப்பட்டன. இதில், தேங்காய் ஒன்று 8 ரூபாய் முதல் 14 ரூபாய் 30 காசு என மொத்தம் 40 ஆயி ரத்து 800 ரூபாய்க்கு விற் பனை செய்யப்பட்டன. அந் தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியா ளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார்கள் ரூ.9 லட் சத்து 80 ஆயிரத்துக்கு விற் பனை செய்யப்பட்டன.
தமுஎகச அந்தியூர் கிளை அமைப்பு
ஈரோடு, மே 30- அந்தியூர் தமுஎகச கிளை அமைப்பு கூட்டத் திற்கு மருத்துவர்.சு.கவிதா தலைமையேற்றார். தலை வராக க.செங்கோட்டை யன், துணைத் தலைவராக த.ரா.கந்தசாமி, செயலாள ராக பு.ஜெயக்குமார், துணைச் செயலாளராக கரு மலைராஜன், பொருளாள ராக ப.ஹரிகிருஷ்ணா, செயற்குழு உறுப்பினராக லோ.சேகர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். முடிவில், மாவட் டத் துணைச் செயலாளர் எழுத்தாளர் கலைக்கோவன் நிறைவுரை யாற்றினார்.
புதுப்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்க கிளை அமைப்பு
திருப்பூர், மே 30– ஊத்துக்குளி தாலுகா புதுப்பாளையத்தில் மாற்றுத் திற னாளிகள் சங்க புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்க கிளை அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் 15 பேர் கலந்து கொண்டனர். ஊத்துக் குளி தாலுகா மாற்றுத் திறனாளிகள் சங்கப் பொறுப்பாளர் ஆர்.மணியன் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் புதிய கிளைத் தலைவராக வேலுமணி, செயலாளராக லோக நாயகி, பொருளாளராக ஜானகி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். வேலம்பாளையம் வேலம்பாளையம் மாற்றுத் திறனாளிகள் சங்க மூன்றா வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தலைவர் ஏ.லோகநாதன், செயலாளர் பி.கமலக்கண்ணன், பொருளாளர் ஜார்ஜ் வர்க்கீஸ், துணைத் தலைவர் கே. குப்புசாமி, துணைச் செயலாளர் ஆர்.விசாலாட்சி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமுஎகச ஊத்துக்குளி கிளை மாநாடு
திருப்பூர், மே 30- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங் கத்தின் ஊத்துக்குளி கிளை மாநாடு ஞாயிறன்று ஊத்துக்கு ளியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கிளைத் தலைவர் ஆர்.அன்பழகன் தலைமை வகித்தார். பா.சின்னச்சாமி வர வேற்றார். செயலாளர் மு.நந்தகுமார் வேலையறிக்கை முன் வைத்தார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணைத் தலைவர் செ.நடேசன் ஆகியோர் உரையாற்றி னர். இக்கூட்டத்தில் நீரோடை பெண் கவிதை நூலாசிரியர் நீரோடை மகேஷுக்கு ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். புதிய கிளைத் தலைவராக கை.குழந்தைசாமி, செயலா ளராக மு.நந்தகுமார், பொருளாளராக ஆர்.அன்பழகன் உள் ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மா.மனோஜ் நன்றி தெரிவித்தார்.
வாலிபர் தற்கொலை
தாராபுரம், மே 30- தாராபுரம் பீமர் மெயின் வீதியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் நாச்சி முத்து (23) செங்கல் சூளை யில் வேலை செய்து வந்தார். இவருக்கு மதுப்ப ழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், நாச்சிமுத்து, அமரா வதி ஆறு நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாராபுரம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.