districts

img

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுதினம் அனுசரிப்பு

தருமபுரி, ஜூலை 23- விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பி ரமணிய சிவா-வின் நினைவு தினம் செவ்வா யன்று அனுசரிக்கப்பட்டது. விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிர மணிய சிவா-வின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம், செவ்வாயன்று தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள அவரது மணிமண்ட பத்தில் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, சுப்பிரமணிய சிவா-வின் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ் ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், வட்டாட்சியர் இலட் சுமி, துணை காவல் கண்காணிப்பாளர் மகா லட்சுமி, பேரூராட்சித் தலைவர் பிருந்தா நடரா ஜன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி முருகன், வட்டார வளர்ச்சி அலு வலர் சுருளிநாதன், வருவாய் ஆய்வாளர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி இதேபோன்று, தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நூற்றாண்டு பேரணி, பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தேச பந்து சங்க கட்டடம் அருகிலிருந்து துவங்கி யது. இந்நிகழ்ச்சிக்கு சுப்பிரமணிய சிவா பேரவையின் அமைப்பாளர் வே.விசுவநா தன் தலைமை வகித்தார். திமுக நகரச் செயலா ளர் வி.சண்முகம் பேரணியை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை ஊர்வலமாக சென்று நினை விடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நகரத் தலைவர் தங்கராசு, திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் மாதன், நகரத் தலை வர் வினோபாஜி, விடுதலை வாசகர் வட்ட தலைவர் சின்னராஜ், சிபிஎம் வட்டச் செயலா ளர் சின்னசாமி, பேரவையின் துணை அமைப் பாளர் முருகேசன், திமுக முன்னாள் நிர்வாகி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். வாலிபர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா-வின் நினைவிடத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இதில் சங்கத் தின் மாநில துணைத்தலைவர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டச் செயலாளர் அருள் குமார், பொருளாளர் சிலம்பரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் குறளரசன், குப்பன், பிர வீன், ராஜசேகர், ராகுல், வேலாயுதம், ரஜினி, லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.