districts

ஆபத்தை ஏற்படுத்தும் ஆழ்துளை கிணறுகள் எச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு

திருப்பூர், ஆக. 12- ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்  உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும்  கட்டுமான குழிகள் அருகில் பாதுகாப்பு  மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்க ளுக்கு திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டங்க ளில் திறந்த வெளிகிணறுகள், ஆழ்து ளைக்கிணறுகள், கட்டுமானப்பள் ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகி யவை மனிதர்கள், விலங்குகள் மற்றும்  குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க  ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. மேலும், உயிரிழப்புகள் ஏற்படவும் கார ணமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பாதுகாப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயளாலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறைகளை வழங்கியுள்ளார். அந்த  வகையில் திருப்பூர் மாவட்டத்தில்  கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்த  வெளிகிணறுகள் மற்றும் செயலிழந்த  ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரி வான கணக்கெடுப்பு நடத்தவும், பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்  வகையில், திறந்த வெளிகிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறு களின் இருப்பிடங்கள், பரிமாணங்கள்  மற்றும் இது தொடர்பான விரிவான  அறிக்கையை தயாரிக்க வேண்டும் என  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி கள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாத்திய மான அபாயங்களைக் குறைக்க, அனைத்து திறந்த வெளிகிணறுக ளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிண றுகளையும் திறம்பட பாதுகாப்பது அவ சியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள்  ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்த  கிணறுக்கும் போதுமான உயரத்தில்  உறுதியானசுவர்கள் அமைக்கப்பட்டி ருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், செயலிழந்த ஆழ்துளை கிண றுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய விபத்து களைத் தடுக்கும் வகையில் இவைக ளைக் கண்டறிந்து உடனடியாக மூட வும் தொடர்புடைய அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கைவிடப்பட்ட குவாரி குழி களால் ஏற்படும் அபாயங்களைக் கருத் தில் கொண்டு இளைஞர்கள் மற்றும்  குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கையாக கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலி கள் அமைக்க குவாரிகளின் குத்தகைதா ரர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்று சாலையைப் பயன்படுத்துப வர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில், கட்டு மானக்குழிகள் மற்றும் அகழிகளை வலு வான தடுப்புகளை அமைத்திடவும், அவை ஓட்டுநர்களுக்கு நன்றாக தெரி யும் வகையில் அமைக்கப்பட்டிருப் பதை உறுதிப்படுத்த தொடர்புடைய  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. மேற்கண்ட அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பல கைகள் வைத்திடவும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.