districts

ஆட்சியர் ஆய்வு: நகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்

சேலம், பிப்.22- மாவட்ட ஆட்சியர் நரசிங்கபுரம் நக ராட்சியில் ஆய்வு மேற்கொண்ட சில மணி நேரங்களிலேயே, நகராட்சி ஆணையாளர் பணியிட மாற்றம் செய் யப்பட்டார்.  சேலம் மாவட்டம், ஆத்தூரில் “உங் களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற  திட்ட முகாமில், ஆட்சியர் ரா.பிருந்தா தேவி மற்றும் அனைத்து துறை அதி காரிகள் பங்கேற்றனர். இதனிடையே நரசிங்கபுரம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்டவை களுக்கு பொதுமக்கள் மனு அளித்திருந் தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கா மல் இழுத்தடிப்பு செய்வதாகவும், லஞ் சம் கேட்பதாகவும் நகர்மன்ற உறுப்பி னர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித் தனர். இதன் எதிரொலியாக நரசிங்க புரம் நகராட்சி அலுவலகத்தில், நகர் மன்ற தலைவர் அலெக்ஸாண்டர், நக ராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் மற்றும் அலுவலர்கள், அதிமுக, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் களிடம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி விசாரணை மேற்கொண்டார். அப் போது மாவட்ட ஆட்சியர் முன்னிலை யில், நகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் எந்த பணிகளையும் மேற் கொள்வதில்லை. “மக்களுடன் முதல் வர்” திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுப்ப தில்லை நகர்மன்ற உறுப்பினர்கள் குற் றஞ்சாட்டினர். இதன்பின் நகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து ஆட்சி யர் விளக்கம் கேட்டார். மேலும், சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பிரச்ச னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக் கப்படும், என தெரிவித்தார். நகராட்சி யில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற் கொண்ட சில மணி நேரங்களிலேயே, நகராட்சி ஆணையாளர் முகமது சம்சு தீன் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜ பேட்டை தாலுகாவிற்குட்பட்ட மேல் விஷாரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.