நாமக்கல், ஏப்.25- மோகனூர் சுகாதார முகாமில் பொதுமக்களுக்கு மரக்கன்று, மஞ்சப்பைகளை வழங்கி ஆட்சி யர் ஸ்ரேயா பி சிங் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் வட்டார அளவி லான சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாபி சிங் முகாமினை தொடங்கி வைத்தார். இம்முகா மில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பள்ளி இளம் சிறார் நலத்திட்டம், உணவு பாது காப்புத்துறை, குடும்ப நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தாய் சேய் நலம், நோய்த்தடுப்புத் துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.மேலும், மோகனூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் தடை குறித் தும், மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந் தது. தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் மூலம் மூலிகை கண் காட்சி அமைக்கப்பட்டு பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும், நோய்களை குணப்படுத்தவும் உட் கொள்ள வேண்டிய மூலிகைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக் கமளிக்கப்பட்டது.மேலும், கொரோனா எதிர்ப்பு மருந்தான ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. முகாமை பார்வையிட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், எடைகுறைவான குழந்தைகளுக்கு சத்துணவு பொருட்களையும், நமது நாமக்கல் பசுமை நாமக்கல் திட்டத்தின் மூலம் பழ மரக்கன்றுகளை மாணவர்க ளுக்கும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப் புணர்வு ஏற்படுத்த பொதுமக்க ளுக்கு மீண்டும் மஞ்சப்பைகளை யும் வழங்கி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார். இதில், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா, துணைத் தலை வர் சரவணகுமார், துணை இயக்கு நர் சுகாதாரம் பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவா சன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி, வட்டார மருத்துவ அலுவலர் கலைச் செல்வி, பேரூராட்சி செயல் அலு வலர் கோமதி உள்பட அரசு அலுவ லர்கள், மருத்துவர்கள், செவிலி யர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.