districts

img

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

கோவையில், தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கட்டுமானத் தொழிலாளர்கள் 5 பேர் பலியான விவகாரத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை, குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் ஒரே வளாகத்தில் தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பழைய சுற்றுச்சுவருக்குப் பதிலாக அருகிலேயே பெரிய சுற்றுச்சுவரை கல்லூரி நிர்வாகம் அமைத்து வருகிறது. புதிய சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார், தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், கட்டுமான மேற்பார்வையாளர் குனியமுத்தூரை சேர்ந்த சாகுல்ஹமீது, பொறியாளர் அன்னுரை சேர்ந்த அருணாச்சலம் ஆகியோர் மீது 288, 304(ii) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

;