கோவை, ஏப்.29– இரண்டு துண்டான நிலையில் அனு மதிக்கப்பட்ட இளைஞரின் கையை வெற்றி கரமாக பொருத்தி கோவை அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் சாதனை படைத் துள்ளனர். இதுகுறித்து கோவை அரசு மருத்துவ மனை முதல்வர் நிர்மலா கூறுகையில், கடந்த ஏப்.8 ஆம் தேதியன்று கணேஷ் (21) என்ற ஒரிசா மாநில இளைஞரின் வலது கையானது அரிவாளால் துண்டிக்கப்பட்ட நிலையிலும், தலை, கழுத்து, முதுகுப் பகுதி யில் வெட்டுக் காயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையின் மருத்துவர்கள், துறைத் தலைவர், வி.பி.ரமணன், மருத்துவர்களான செந்தில்குமார், பிரகாஷ், கவிதாபிரியா, சிவக்குமார், மயக்கவியல் நிபுணர் சதிஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக துண்டிக்கப்பட்ட கையினை இணைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு, 5 மணி நேரத்திற்குள், எலும்புகள், தசை நரம்புகள், ரத்தக் குழாய்களை இணைத்து துண்டான கைக்கு உயிர் ஊட்டினர். தற்போது கணேஷ் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அந்த இளை ஞருக்கு பல லட்சங்கள் மதிப்புடைய உயர் தர அறுசை சிகிச்சையை, பிளாஸ்டிக் சர்ஜரி துறை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய் துள்ளனர், என்றார். முன்னதாக, இந்த வெற் றிகரமான அறுவை சிகிச்சையை மேற் கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதல் வர் நிர்மலா உள்ளிட்ட சக மருத்துவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுபோன்ற உடல் உறுப்புகள் துண்டா னால் அதனை இணைக்க தனியார் மருத் துவமனைகள் லட்சக்கணக்கில் பணம் கட்ட ணமாக வசூலிக்கின்ற நிலையில், எந்த கட்டணங்களும் இல்லாமல் அரசு மருத்துவ மனையில் இலவசமாக பொருத்தி சாதனை படைத்து அரசு மருத்துவமனையின் மீது எளிய மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது.