கோவை, டிச.21- அரசு பேருந்து மோதியதால் உடல் உறுப்புகள் செயலிழந்த வாலிபருக்கு ரூ.39 லட்சம் இழப் பீடு வழங்க வேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட் டது. ஈரோடு மாவட்டம், பவானி சாகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (59). அவருடைய மகன் அருண் சாமுவேல் (30). இவர்கள் அன் னூர்- கோவை ரோடு கணேசபுரம் பண்ணாரியம்மன் மில் அருகே கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந் தேதி இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த னர். அப்போது எதிரே வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மோதியதில் தமிழ்செல்வியின் கழுத்து வலதுபுற எலும்பில் முறிவு ஏற்பட்டது. அருண் சாமுவேலுக்கு மூளை, இடதுகை மணிக்கட்டுக்கு மேல் பகுதி, கழுத்து, மார்பின் விலா எலும்புகளில் முறிவு ஏற் பட்டது.
இதைத்தொடர்ந்து விபத் தால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, எதிர்கால வாழ்க்கை பாதிப்புக் காக ரூ.73 லட்சம் வழங்க வேண் டும் என்று கோவை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் அருண் சாமு வேல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி பதி கே.முனிராஜா, அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு, அஜாக் கிரதை, அதிவேகம் ஆகியவற் றால் மட்டுமே விபத்து ஏற்பட்டுள் ளது உறுதியாகிறது. எனவே, தமிழ்ச்செல்வியின் வலி, வேதனை, மருத்துவ செலவு களுக்கு இழப்பீடாக ரூ.1.56 லட் சத்தை 7.5 சதவிகித வட்டியுடன் அளிக்க வேண்டும். விபத்தால் ஏற் பட்ட பாதிப்பால் அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ, இயற்கை உபாதைகளை போன்ற அத்தியா வசிய பணிகளை செய்ய முடியாத அளவுக்கு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அருண் சாமுவேல் உள்ளார்.
மருத்துவக் குழு அளித்த ஊனச்சான்றில் அவ ருக்கு 46 சதவீதம் ஊனம் ஏற்பட்டு உள்ளதாக சான்றளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், நரம்பி யல் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்திருந்த போதும் அவருக்கு தகுந்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கக் கூடிய நிலையை இழந்து, அவரு டைய திருமண எதிர்பார்ப்பு பாதிக் கப்பட்டுள்ளது. எனவே, அவரின் வருவாய் இழப்பு, திருமண எதிர்பார்ப்பு இழப்பு, மருத்துவ செலவினம், வலி, வேதனை ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.39 லட்சத்தை 7.5 வட்டியுடன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.