கோவை மாநகராட்சி, 11 ஆவது வார்டில் ரூ.29.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்த குமார் துவக்கி வைத்தார். இதில் வடக்கு மண்டல குழு தலைவர் வே.கதிர்வேல், பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலு சாமி, வி.இராமமூர்த்தி, பழனிசாமி (எ) சிவா, பூங்கொடி சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.