இளம்பிள்ளை, டிச.15- இளம்பிள்ளை அருகே சாக்கடை கால்வாயை கையுறை உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின்றி துப்புரவு பணியாளர்கள் தூர்வாரும் அவல நிலை இருந்து வருகி றது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் இளம் பிள்ளை - காக்காபாளையம் பிரதான சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையின் குறுக்கே சாக்கடை நீர் சென்று வருகிறது. இதைத்தொடர்ந்து, புதனன்று இளம் பிள்ளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இருவர் கழிவு நீர் கால்வாயில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பணியாளர்கள் இருவரும் கையுறை, பாதுகாப்பு கவசம் எதுவும் அணியாமல் ஆபத்தான முறையில் கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இத்தகைய துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கையுறை, பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ய வேண் டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், இத்தகைய விதி முறைகளை பேரூராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி நிர் வாகங்கள் முறையாக கடைபிடிப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. தற்போதும், தூய்மைப் பணி யாளர்களுக்கு சாக்கடை கால்வாய் அடைப்பை அகற்று வதற்கான முறையான உபகரணங்கள் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டே எழுந்துள்ளது. ஆகவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகங்கள் உரிய கண் காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.