districts

img

ரேசன் கடைகளுக்கு பொருட்களை மாதத்தின் முற்பகுதியிலேயே வழங்க சிஐடியு வலியுறுத்தல்

ஈரோடு, அக்.26- ரேசன் கடைகளுக்கு அனைத்து அத்தியா வசிய பொருட்களையும் மாதத்தின் முற்பகு தியிலேயே வழங்குமாறு ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் இணைப்பதிவாளரிடம் அளிக்கப் பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, பொது  விநியோகத் திட்டத்தை தனித்துறையாக அறி விக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள  அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் அனைத்தையும் மாதத் தின் முற்பகுதியிலேயே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களும் வழங்கப்பட வேண் டும். 1988 முதல் 1999 வரை பணியில்  உள்ள எடையாளர்களுக்கு, விற்பனையாளர் பதவி  உயர்வு வழங்க வேண்டும். கடை ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். கருணை அடிப்படை யில் வாரிசு வேலை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள் ளன. முன்னதாக, இந்நிகழ்வில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறு முகம், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் கோவிந்தசாமி, விஸ்வநாதன், சின்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.