districts

img

பொத்தாம் பொதுவான போராட்டம் போதாது: கொள்கை மாற்றத்திற்காக முன்வர வேண்டும்

திருப்பூர், ஜன.18- பொத்தாம் பொதுவான போராட்டம் நடத்தினால் மட்டும் அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்காது, கொள்கை மாற்றத் திற்காக தொழில் துறையினர் விரிவான ஒற் றுமையுடன் ஒரு மேடையை உருவாக்கிப் போராட முன்வர வேண்டும் என்று சிஐ டியு பனியன் தொழிலாளர்  சங்கம் அழைப்பு விடுத்தது. பருத்தி நூல் விலை உயர்வைக் கட் டுப்படுத்துவதற்கு ஜனவரி 17,18 ஆகிய இரண்டு நாட்கள் திருப்பூர் தொழில் அமைப் புகள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தின.  இதன் ஒரு பகுதி யாக திருப்பூரில் ரயில் மறியல் போராட் டத்துக்கு தொழில் அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். அதன்படி செவ்வாயன்று காலை தொழில் அமைப்பினரும், தொழிற் சங்கத்தினரும் திருப்பூர் தியாகி குமரன் நினைவகம்  முன்பாக குவிந்தனர். . ரயில் மறியல் போராட்டத்துக்கு பதி லாக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி மறியலை கைவிட்டு அறப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இந்த  போராட்டத்துக்கு தலைமை ஏற்ற பின்ன லாடை துணி உற்பத்தியாளர் சங்கத் தலை வர் அகில் சு.ரத்தினசாமி கூறினார். பஞ்சு, நூல் பதுக்கலை தடுக்கவும், பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வும், நூல் விலையைக் குறைக்கவும் ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி தொழில் துறை யினர் முழக்கமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்தில் சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத் வாழ்த்தி பேசுகையில், நூல் விலை உயர்வு என்பது ஏதோ தற்செய லான பிரச்சனை அல்ல.எனவே பொத்தாம் பொதுவான கோரிக்கை வைத்துப் போராடி னால் போதாது.

இது ஒன்றிய அரசு பின் பற்றும் கொள்கை சார்ந்தது.அந்த கொள்கை காரணமாகவே தொழில் துறைக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, அரசின் கொள்கையை மாற்றுவ தற்கு விரிவான ஒற்றுமையுடன் ஒரு மேடையை உருவாக்கி தொழில்  துறையி னர் போராடுவதற்கு  முன்வர வேண்டும். இதுபோன்ற தொழில் துறையினர் எடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் சிஐடியு தொழிற்சங்கம் முழு ஆதரவளிக் கும் என்று கூறினார்.  அதேபோல் ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், ஐஎன்டி யுசி செயலாளர் அ.சிவசாமி, எம்எல்எப் செயலாளர் மனோகரன் ஆகியோரும் தொழில் அமைப்பினர் நடத்தும் போராட் டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரி வித்தனர். தொழில் அமைப்புகள் சார்பில் தென் னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) பொதுச் செயலாளர் எம்பரர்.வீ.பொன்னுசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணைச் செயலாளர் பிரிமீயர் செந் தில்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற் றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கப் பொதுச் செய லாளர் எஸ்.முருகசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு  தலைவர் அகில் மணி உள்ளிட் டவர்களும், இந்த போராட்டத்தின் நோக் கத்தை விளக்கிப் பேசினர்.  இந்த போராட்டத்தில் பல்வேறு தொழில் அமைப்புகளைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.