districts

img

பாதுகாப்பற்ற டாஸ்மாக் கடைகளை மூடிடுக

ஈரோடு, டிச.6-  பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை முடிடக்கோரி திங்க ளன்று ஈரோட்டில் சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என். முருகையா தலைமையேற்றார். இதில் பொதுச்செயலாளர் வை.பாண்டியன், சம் மேளன துணைத்தலைவர் பொன்.பாரதி, பொருளாளர் க.ரவிச்சந்திரன், சம்மேளன குழு உறுப்பினர் வி.ராஜேந்திரன் உள் ளிட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அனைத்து கடை களுக்கும் புதிதாக லாக்கர்கள் வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் பொது இட மாறுதல் அமல்படுத்த வேண்டும். தற்போது டாஸ்மாக் கடைகள் செயல் படும் நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றி அமைத்துள்ள னர். இது சமூகவிரோத செயல்களை ஊக்கு விப்பதற்கே பயன்படும். ஆகவே ஏற்கனவே செயல்பட்ட நேரமான காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதையே நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பப்பட்டன.