districts

அவுட்சோர்சிங் பிரச்சனையால் பாதிக்கப்படும் உள்ளாட்சி ஊழியர்கள்: ஆட்சியர், தொழிலாளர் உதவி ஆணையரிடம் சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஜூன் 23 - திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி களில் வேலை செய்யும் தூய்மை, குடிநீர்,  டிபிசி பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின்  ஊதியத்தைக் குறைக்காமல் அரசாணைப் படி நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலி யுறுத்தி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் கே.ரங்கராஜ் உள்ளிட்டோர் வெள்ளி யன்று அளித்த இம்மனுவில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நக ராட்சிகளில் தூய்மை பணியாளர்களை அவுட் சோர்சிங் முறைக்கு விடப்பட்டதில் பல்வேறு  பிரச்சனைகள் எழுந்துள்ளது. ஒப்பந்ததா ரர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் விசயத்தில்  சட்டத்திற்கு முரணாக பல நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். குறிப்பாக பத்து வருடத் திற்கும் மேலாக வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்களை ஐம்பது வயது கடந்தவர்கள் என்று கூறி ஆட்குறைப்பு செய் யவும், அவர்கள் பெற்றுவரும் தினசரி ஊதி யத்தைக் குறைக்கவும் முயற்சி செய்கிறார் கள்.  இதனால் திருமுருகன்பூண்டி, உடு மலை, பல்லடம் ஆகிய நகராட்சிகளில் வேலை நிறுத்தம், காத்திருப்பு போராட்டங் கள் நடந்துள்ளது. மேலும் கடந்த 12ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் பல  மணி நேரம் காத்திருப்பு போராட்டம் நடத்தப் பட்டது. ஆட்சியரை நேரில் சந்தித்து திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகள் மற் றும் மாநகராட்சிகளில் வேலை செய்யும் இந்த  பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணை இரண்டு டிஎன் 62ன்படி மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த  தினசரி ஊதியத்தை, ஒப்பந்ததாரர் வழங்கு வதற்கு உறுதி செய்ய வேண்டும். ஈபிஎப் மற் றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்வதில் ஒப்பந்த  நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்கு  தொகையை செலுத்துவதை உறுதி செய்ய  வேண்டும். மாதாமாதம் 5ஆம் தேதிக்குள் ஊதியமும், ஊதிய ரசீதும் வழங்குவதை உறு திப்படுத்த வேண்டும்.

50 வயதுக்கு மேல்  உள்ள தூய்மை பணியாளரை நிறுத்துவோம் என்றும், வேறு தொழிலாளர்களைப் பணிய மர்த்துவோம் என்றும் மிரட்டுவதை தடுத் திட வேண்டும். திருமுருகன் பூண்டி நகராட்சி யில் அவர்கள் பெற்று வந்த தினசரி ஊதியம்  ரூபாய் 593 வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சித் துறையும், தொழிலாளர் துறை யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட் டுக்கொண்டனர்.  இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கூறுகையில், கடந்த 16ஆம் தேதி பல்லடத்திலும், 20ஆம் தேதி திருமுருகன் பூண்டி நகராட்சியிலும் ஒப்பந்ததாரர்கள் ஆட்குறைப்பு செய்ய முயற்சித்தார்கள். குறிப்பாக கொரோனா முடக்க காலத்தில் அர்ப்பணிப்போடு வேலை செய்து மக்களை காத்த தூய்மை  பணியாளர்களை, தற்போதைய அவுட்சோர் சிங், ஆட்குறைப்பு, சட்டப்படி ஊதியம் வழங்க மறுப்பது ஆகியவற்றால் கடும் அதி ருப்தியும், துயரமும் அடைந்துள்ளனர்.எனவே மேற்கண்ட நியாயமான சட்டப்பூர் வமான கோரிக்கைகள் மீது இம்மாத இறு திக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண் டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக் கைகளை சங்கத்தில் பேசி முடிவு செய் வோம் என்று கூறினார். இந்நிகழ்வில், பூண்டி  நகராட்சி 10 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பி னர் பி.சுப்பிரமணியம் உட்பட சங்க நிர்வா கிகள் பங்கேற்றனர்.