பொள்ளாச்சி, நவ.10- பொள்ளாச்சியில், கம்பன் கலை மன்றம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டா டப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரிமா சங்க கட்டடத்தில், கம்பன் கலை மன்றம் சார்பில், நவம்பர் மாத நிகழ்ச்சி மற்றும் குழந்தைகள் தின விழா ஞாயிறன்று கொண் டாடப்பட்டது. பரதநாட்டிய நிகழ்வும், அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பாட்டு, பேச்சு, கவிதை, நடனம், வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் போதை ஒழிப்பில் பெரும்பங்கு ஆற்ற வேண்டியது குடும்பமா? சமூகமா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடை பெற்றது. இதில், கலந்து கொண்ட குழந்தை களுக்கு நூல்கள், பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட் டது. முடிவில், ம.கௌ.மிதுன் நன்றி கூறி னார்.