கோவை, நவ.14- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந் தைகள் தினத்தை முன்னிட்டு வியாழனன்று மாவட்ட ஆட்சி யர் கிராந்துகுமார் பாடி தலைமையில், மாவட்ட குழந்தை கள் நல அலுவலர் ஹஃப்ஸீபா முன்னிலையில் குழந்தை பாது காப்பு உறுதிமொழியினை அரசு ஊழியர்கள் ஏற்றுக் கொண்ட னர். பின்னர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங் கள், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றை தடுப்பது குறித்த பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சி யர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முதல் பந்தய சாலை வரை குழந்தைகள் பாது காப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். ஈரோடு இதைபோல், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.