சென்னை,டிச.5- தருமபுரம் ஆதீனம் மறை விற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட் டம், மயிலாடுதுறை, தரும புரம் ஆதீனத்தின் 26-வது குருமணி சண்முக தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, ஆதினம் மரணமடைந் தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்த மடைந்தேன். இவர் சுமார் 48 ஆண்டுகள் சமயப்பணி, திருப்பணி மற்றும் சமூகப் பணிகள் பலவற்றிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது சிஷ்ய கோடி களுக்கும், ஆன்மீக அன்பர்க ளுக்கும் எனது ஆழ்ந்த இரங் கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி யுள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.