கோவை, நவ.12- கோவை அருகில் 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வழங்கி யதால் கூட்டம் அலை மோதியது. இந்தியா முழுவதும் 10 ரூபாய் நாணயம் புழக் கத்தில் உள்ளது. இருப் பினும், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயத்தை மளிகைக் கடைகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொதுமக்களிடம் இருந்து வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியும் 10 ரூபாய் நாணயங் களை வாங்குவதை புறக்கணிக்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளன. ஆனாலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு பேருந்து களில் பயணிகள் வழங்கும் 10 ரூபாய் நாண யங்களை நடத்துநர்கள் பெற்று கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் பல்வேறு தரப்பினர் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவையை அடுத்த கிணத்துக்கடவில் புதிதாக ஒரு பிரியாணி உணவகம் திறக்கப்பட்டது. அந்த உணவ கத்தில் 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டனர். இதில், 10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டு வரும் 125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் பலர் 10 ரூபாய் நாணயத்துடன் உணவகம் முன்பு திரண்டனர். முதலில் வந்த 125 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் அங்கு கூட்டம் அலை மோதியது.