தருமபுரி, மே 9- தருமபுரி மாவட்டத் தில் கொளுத்தும் வெயில் காரணமாக வெற்றிலைக் கொடிகள் முற்றிலும் கரு கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, தருமபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற் றிலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தரும புரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. தருமபுரியில் முக்கல் நாயக்கன்பட்டி, நூலஹள்ளி, மிட்டாரெட்டிஹள்ளி, தின்ன ஹல்லி, நடுப்பட்டி, அக்குமானஹல்லி, கோடியூர், பாளை யம்புதூர், கோம்பை, நார்த்தம்பட்டி, ஜாலி கொட்டாய், கேத் துரெட்டிப்பட்டி, வெள்ளோலை உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயி ரம் ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள் ளது. ஒரு கட்டு ரூ.150 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. கடந்த வாரம் ஒரு மூட்டை வெற்றிலை ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும், இரண்டு வாரத்தில் வரத்து குறைந்ததால், வெற்றிலை மூட்டைக்கு ரூ.6 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் போதிய மழை இல் லாமல், கொளுத்தும் வெயில் காரணமாக கிணறு மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் வெற்றிலை கொடிக்கால்களை காப்பாற்ற விவ சாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றினர். ஆனா லும், வெற்றிலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியா மல் வெற்றிலை கொடிக்கால் முற்றிலும் காய்ந்து கருகிப்போ யுள்ளன. கோடை மழை கை கொடுத்தால், பாதி கொடி கள் துளிர் வரும் நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளன. இல்லையெனில் மீண்டும் வெற்றிலை விவசாயம் தளைக்க மூன்று மாதங்கள் ஆகிடும். எனவே, வெற்றிலை விவசாயிகளை நேரில் சந்தித்து, காய்ந்து கருகியுள்ள வெற்றி லையை கணக்கீடு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.