districts

இடைநில்லா பேருந்துகள் மாற்றம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை ஏற்பு

திருப்பூர், மே 18 – பொள்ளாச்சி – திருப்பூர் இடையே  பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க இடை நில்லா பேருந்துகளை ரத்து செய்து சாதாரண பேருந்துகள் இயக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோரிக்கையை ஏற்று போக்குவ ரத்து கழக மண்டல மேலாளர் கடிதம்  எழுதியுள்ளார். திருப்பூர் முதல் பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகள் இடைநில்லா பேருந்துகளாக ஒரு  நாளைக்கு 24 நடைகள் இயக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக இந்த இரு  ஊர்களுக்கும் இடையில் வீரபாண்டி,  அருள்புரம், பல்லடம், காமநாயக்கன் பாளையம், சுல்தான்பேட்டை, காட்டம் பட்டி, நெகமம், புளியம்பட்டி போன்ற முக்கிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தப்படாததால் ஏராள மானோர் சிரமப்பட்டனர். இதனால் பனி யன் நிறுவனங்களுக்கு வேலைக்கு வருவது, பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க செல்லும் மாணவ மாணவிகள்  மற்றும் பணி நிமித்தம் இந்த ஊர்க ளுக்குப் போய்வரும் கிராமப்புற ஏழை,  எளிய மக்கள் கடும் பாதிப்புக்கு உள் ளாகினர். இப்பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட்  கட்சியின் பல்லடம் ஒன்றியக்குழு சார் பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர், திருப் பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றியச்  செயலாளர் ஆர்.பரமசிவம் உள்ளிட்ட  நிர்வாகிகள் நேரில் மனு கொடுத்து முறையிட்டனர். குறிப்பாக, திருப்பூரில்  இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப் படும் பேருந்துகளை சாதாரண பேருந்து களாக இயக்க வேண்டும் என வலி யுறுத்தினர்.  இக்கோரிக்கையை ஏற்று திருப்பூர் – பொள்ளாச்சி இடையே சாதாரண பேருந்துகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இடை நில்லா பேருந்துகள் ரத்து செய்யப்பட்டி ருப்பதாகவும் திருப்பூர் போக்குவரத்து  மண்டல பொது மேலாளரிடம் இருந்து  மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் மூலம் பதில் அளிக்கப்பட்டுள் ளது. பொதுமக்கள், சாதாரண பயணிகள்  நலன் கருதி நடவடிக்கை எடுத்த மாவட்ட  ஆட்சியர், திருப்பூர் போக்குவரத்து மண்டல மேலாளர் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் நன்றி தெரிவிப்பதாக கட்சியின் பல் லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரம சிவம் கூறியிருக்கிறார்.