அவிநாசி,ஜன.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் அவிநாசி கிளை சார்பில் புத்த கங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் தனி யார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை அவிநாசியில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் அவிநாசி கிளை சார்பில் புத்த கங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் டிசம் பர் 31 தொடங்கி ஜனவரி 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாலை 5 மணி முதல் புத் தக விற்பனை நடைப்பெற்றது. மேலும் பாடல், நடனம், கவிதை, நாடகம் உள்ளிட் டவை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உறுப் பினர் ரவீந்திரன் தலைமையில், அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுச் சாமி, பேரூராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சமூக ஆர்வலர் வழக் கறிஞர் விஜய் ஆனந்த், நாடகக் கலைஞர் வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் முன்னிலை யில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் சுசீலா வரவேற்புரையாற்றினார். இதைதொடர்ந்து தேடல் குறும்படத்தை நடராஜன் அறிமுகம் செய்து வைத்தார். இதில் எழுத்தாளர்கள் ரகு, ரமேஷ் கவின், செந்தில், ராம்ராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து புகுரி அரங்காட்டம் குழுவினர் தங்க ஒரு நாட கம், என்ற தலைப்பில் அரங்கேற்றப்பட்டது. அதேபோல ரங்கராஜ் குழுவினர்கள் பாடல் கள் அரங்கேற்றம் செய்தனர். இதனை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருப்பதி வாழ்த்துரை வழங்கினார். இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய நிர்வா கிகள் தினகரன், சம்பத் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.