நாமக்கல், மே 9- நாமக்கல் அருகே இளம்பெண் பாலியல் வன்கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியில், பட்டதாரி இளம் பெண் ஒருவர், கடந்த மார்ச் 11 தேதி யன்று மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்ற இடத்தில் பாலியல் வன் கொலை செய்யப்பட்டார். இவ்வழக் கில் 17 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில், உண் மையான குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என தொடர்ந்து விவசாய சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வரு கின்றனர். இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறையின் செயல்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத தால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற் பட்டுள்ளது. எனவே, இந்த வழக் கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பரமத்தி வேலூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் வட்ட குழு செயலாளர் சண்முகம் தலைமை ஏற்றார். மாவட்ட செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர். பரமத்திவேலூர் கிளை செய லாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறி னார்.