கோவை, ஜூலை 25- தமுஎகச மாநில துணைத் தலைவ ரும், எழுத்தாளருமான மயிலை பாலு எழுதிய “சாதி நமது அதிருப்திகளின் தோற்றுவாய்” மொழியாக்க நூல் வெளியீட்டு விழா புதனன்று கோவை புத்தக கண்காட்சியில் நடைபெற்றது. கோவை மாவட்ட நிர்வாகமும், கொடிசியா அமைப்பும் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியில் இசபெல் வில்கெர்சன் எழுதிய “சாதி நமது அதிருப்திகளின் தோற்றுவாய்” மொழி யாக்க நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. மயிலைபாலு எழுதிய இந்நூலை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் தி.மணி வெளியிட் டார்.
முதல் புத்தகத்தை தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.கரீம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், நூலினை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாள ரும் தமுஎகச மாநில துணைத்தலைவர் மயிலை பாலு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், எழுத்தா ளர்கள் நாஞ்சில்நாடன், திருப்பூர் எ.ஈஸ்வரன், ச.பாலமுருகன், பாமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.