சேலம், மே 23- கூட்டுறவுத்துறை பதவி உயர்வில் தலித் பணியாளர்கள் புறக்கணிக்கப்படு வதாக கூட்டுறவு சங்க விற்பனையாளர் கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் எஸ்:1308 என்ற கூட்டுறவு சங் கம் 40 ஆண்டுகாலமாக இயங்கி வருகி றது. இதன் செயலாளராக உள்ள ராஜ மாணிக்கம் மற்றும் தயாளன் ஆகி யோர், முறையான நிர்வாகம் மற்றும் சாதிய ரீதியான ஆதிக்கத்தை கடைப் பிடித்து வருவதாக விற்பனையாளர் கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பணி நியமனம், பணி வரன் முறை, பதவி உயர்வு உள்ளிட்டவை களில் சாதிய பாகுபாடுடன் செயல் படுவதாகவும், இதற்கு சேலம் சரக கூட் டுறவு துணைப்பதிவாளர் முத்து விஜயா துணை போவதாகவும் பாதிக்கப்பட் டோர் தெரிவித்துள்ளனர். மேலும், அம்மாபேட்டை கூட்டுறவு சங்கத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றியும், இதுவரை பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. தேர்வாணையக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 தலித் பணியா ளர்களும், பதவி உயர்விலிருந்து புறம் தள்ளப்படுவதாகவும், தற்காலிக பணி யாளர்களுக்கு பதவி உயர்வில் முன்னு ரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற் றஞ்சாட்டியுள்ளனர்.
இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உரிய தலையீடு செய்து முறைகேடு களில் ஈடுபட்டு, சாதிய பாகுபாடு காட்டி வரும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீதும், முறையாக நடவடிக்கை எடுக் காத சேலம் சரக துணைப்பதிவாளர் ஆகியோர் மீதும் துறை வாரியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க சட்ட விதிகள் பிரிவு 149யை, கடை பிடிக்காமல் செய்யப்பட்ட அனைத்து பணி நியமனங்களையும் விசாரித்து செல்லாது என அறிவிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எவ்வித புகாருக்கும் உட்படாமல் பணியாற்றும் அனைத்து விற்பனையாளர்களுக்கும், பனிமூப்பு பட்டியலை வழங்கி, அதன டிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு மற்றும் பதிவாளரின் சுற்றறிக்கைப்படி, 1980 முதல் 2001 வரை பணியமர்த்தப்பட்ட முறையற்ற பணியாளர்களை உடனடி யாக பணி வரன் முறைப்படுத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும் என கூட்டுறவு சங்க விற்பனையாளர்கள் தெரிவித்த னர். முன்னதாக, நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் கராத்தே கோ.முரு கேசன் மற்றும் பாதிக்கப்பட்ட கூட்டுறவு சங்க விற்பனையாளர்கள் உடனிருந் தனர்.