நாமக்கல், நவ.27- 100 நாள் வேலை திட்டத்தில் காணப்படும் சாதிய பாகுபாடுகளை களைந்து, சம்பந்த பட்ட ஊராட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் நாமக்கல் மாவட்ட 4 ஆவது மாநாடு ஞாயிறன்று திருசெங்கோட்டில் மாவட்ட தலைவர் எம்.கணேசபாண்டியன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட உதவிச்செய லாளர் ஆர்.சந்திரமதி வரவேற்புரையாற்றி னார். மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னாள் மாவட்ட செய லாளர் ப.ராமசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் கி.தங்கமணி அறிக்கையை முன்வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.சி. துரை, சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோ கன், கு.சிவராஜ், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னுசாமி, ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். இம்மாநாட்டில், 100 நாள் வேலை திட் டத்தில் சாதிய பாகுபாடுகளுடன் செயல்படு வதை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட ஊராட்சி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசின் கிராம சபை கூட்டம் அனை வருக்கும் சமமாக நடத்த வேண்டும். பட்டி யலின மக்களை தனிமைப்படுத்துவது போன்ற செயல்களை கைவிட்டு, உயர்வு - தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் சமமான மரி யாதை வழங்க வேண்டும். பட்டியிலின மக்க ளின் பரம்பரை தொழிலாக தூய்மைப்பணி என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இத னால் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தங்களது அந்தஸ்தை உயர்த்திக்கொண்டு மேல் நிலைக்கு சென்றுவிடும் சூழல் நிலவுகிறது. ஆகவே தூய்மை பணியாளர்கள் நியமனத் தில் இட ஒதுக்கீட்டின்படி பணி வழங்க வேண் டும். கொக்கராயன்பேட்டை தலித் மக்க ளுக்கு 1978ல் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத் திற்கு தற்போது வரை வழங்கப்படாமல் உள் ளது. எனவே, 78 குடும்பத்திற்கும் பட்டா வழங்கி பயனாளிகள் குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்டோர் விளிக் கான் கமிட்டியில் தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் நிர்வாகிகளை இணைக்க வேண் டும். பஞ்சமர் நிலங்களை மீட்டு நிலமில்லாத தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாமக்கல் மாவட்ட தலை வராக பி.செல்வராஜ், மாவட்ட செயலாளராக கே.தங்கமணி, மாவட்ட பொருளாளராக எஸ்.கோவிந்தராசு, துணைத்தலைவர்களாக எம்.கணேசபாண்டியன், இ.கோவிந்தராஜ், கு.சிவராஜ், பி.தங்கராஜ், துணைச்செயலா ளர்களாக ஏ.சி.துரைசாமி, எஸ்.சந்திரமதி, எஸ்.சி.சக்திவேல், எம்.மணிகண்டன் உட்பட 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாநி லச் செயலாளர் மாதையன் உரையாற்றி னார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ். கோவிந்தராஜ் நன்றி கூறினார்.