தருமபுரி, அக்.22- காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து நகைகளை கொள்ளைய டித்த கேரளாவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து, அவர்களி டமிருந்து 6 கிலோ தங்க நகைகள், 4 கார்களை பறிமுதல் செய்யப்பட் டன. கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (40), என்பவர் கோவையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்க டைக்கு தேவையான நகைகளை பெங் களூருவில் வாங்கிக்கொண்டு கடை ஊழியர்கள் 4 பேர், கடந்த செப்.28 ஆம் தேதியன்று காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். இதனி டையே தருமபுரி மாவட்டம், காரிமங் கலம் அருகே வந்தபோது, 2 கார்க ளில் வந்த 4 பேர் திடீரென ஊழியர் கள் வந்த காரை வழிமறித்தனர். அப் போது நகைகளை எடுத்து சென்ற காரில் இருந்தவர்களை மிரட்டி 6 கிலோ தங்க நகை மற்றும் ரூ.60 லட் சத்தை காருடன் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவா னீஸ்வரி, சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ்வரி ஆகி யோரின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் களை தேடும் பணி தீவிரபடுத்தப்பட் டது. இந்நிலையில், நகைக்கடை ஊழி யர்கள் பெங்களூருவில் இருந்து வந்த கார், கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருப் பது தெரியவந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து விசா ரணை நடத்தினர். இதற்கிடையே தேடு தல் வேட்டையில் கிடைத்த கண்கா ணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் பதிவுகள் மற்றும் வாகன பயன்பாட்டு விவரங்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கள் என்பது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில் 5க்கும் மேற் பட்டவர்களுக்கு தொடர்பு இருந்த தால் இது கூட்டு கொள்ளை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுஜித் (29), சரத் (36), பிரவீன் தாஸ் (33) ஆகிய 3 பேர் கோவையில் கைது செய்யப்பட்ட னர். இவர்களிடமிருந்து 3 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் 33 கிராம் எடை கொண்ட 2 தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் நடத் திய விசாரணையின்பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிகாபு தின் என்ற சிபு (36), சைனு (30), அகில் (30), சஜிஷ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்க ளிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஒரு செல்போன் மற்றும் ரூ.3 லட்சம் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், இச்சம்பவத்தில் மூளை யாக செயல்பட்ட அந்தோணி, சிரில் ஆகிய 2 பேர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவர் களையும் தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம் பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.