districts

img

தனியாருக்கு பல்லாக்கு தூக்கும் ஒன்றிய அரசு

உதகை, ஜூலை 13- கண்டோன்மெண்ட் போர்டுகளை நக ராட்சியுடன் இணைக்கும் ஒன்றிய அரசின் நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உதகை யில், தி நீல்கிரிஸ் டிஸ்ட்ரிக்ட் கண்டோன் மெண்ட் போர்டு எம்ப்ளாயீஸ் யூனியன் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 62  கண்டோன்மெண்ட்களில் சுமார் 20,000 ஊழி யர்கள் நேரடியாகவும் பல ஆயிரக்கணக் கான ஊழியர்கள் மறைமுகமாகவும் பணி புரிந்து வருகிறார்கள். இதனை, ஒன்றிய பாஜக அரசு கண்டோன்மெண்ட் போர்டு களை நகராட்சியுடன் இணைக்கும் நடவடிக் கைகளை துவக்கியுள்ளது. நகராட்சி அமைப் புகளுடன் கண்டோன்மெண்ட் போர்டுகளை இணைத்தால், ஆயிரக்கணக்கான ஊழியர் களின் எதிர்காலம் மிக பெரிய கேள்விக்குறி யாக மாறிவிடும். பணி பாதுகாப்பு, ஊதியம், பணிமூப்பு, பதவி உயர்வு, போனஸ், மருத் துவ வசதி, பணிகொடை மற்றும் ஓய்வு ஊதி யம் ஆகியவை உத்தரவாதம் இல்லாத நிலைமை உருவாகும். கார்ப்ரேட்டுகளுக்கு பல்லாக்கு தூக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்த ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெல்லிங்டன் கண்டோன் மெண்ட் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்க தலைவர் சி. வினோத், செயலாளர் ராஜ்குமார், சுந்தரம், உதவித்தலைவர் விவேக் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். 200க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.