நாமக்கல், டிச.29- பள்ளிபாளையம் அருகே நடை பெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப் பிக்க கோரி மனு அளிக்க வந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழ்நாடு முழுவதும் மக்களு டன் முதல்வர் சிறப்பு முகாம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 13 துறைகளைச் சேர்ந்த சேவைகளை, பொதுமக்களுக்கு உடனுக்குடன் வழங்கும் வகையில், பல்வேறு பகு திகளிலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், சாதி சான்றி தழ், வருமானச் சான்றிதழ், மின் இணைப்பு பெயர் மாற்றுதல், மாற் றுத்திறனாளி உதவித்தொகை பெறு தல், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, இலவச மருத் துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு மக்க ளுடன் முதல்வர் முகாமில் வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே உள்ள ஆவரங்காடு நக ராட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், சுற்றுவட்டார பகுதிக ளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக் கள் முகாமில் பங்கேற்றனர். இதில் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டுமென ஆதார் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களுடன் ஏராளமான பெண்கள் வருகை தந்தனர். அப் போது, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிப்பது குறித்தான சேவை கள் இல்லை. அதுகுறித்து தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளி யிடும். அப்போது விண்ணப்பிக்க வேண்டும் என முகாமில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத் துத்துறைகளை சேர்ந்த சேவைக ளும் வழங்கப்படும் பொழுது, ஏன் மக ளிர் உரிமைத்தொகை சார்ந்த சேவை கள் வழங்கப்படவில்லை? என வந் திருந்த பெண்கள் ஏமாற்றத்துடன் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து குமாரபாளையம் சமூக பாதுகாப்பு அலுவலர் தங் கம் கூறுகையில், தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் 13 துறைகள் சார்ந்த சேவையில் மகளிர் உரி மைத்தொகை மற்றும் ஆதார் சேவைகளுக்கான திட்டம் வழங் கப்படவில்லை. மேலும், மகளிர் உரி மைத்தொகை பெற ஏற்கனவே விண் ணப்பித்தவர்களுக்கு தங்களு டைய செல்போன்களுக்கு குறுந் தகவல் வரும். அதுவரை பெண்கள் பொறுமையாக காத்திருக்க வேண் டும். மேலும், தமிழக அரசின் சார்பி லும் தற்போது மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்வதற்கான அறி விப்பும் இதுவரையிலும் வர வில்லை. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான, சேவை களும் வழங்கப்பட்டு வருவதாக ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்புவதால், இதுபோல் ஏராள மான பெண்கள் முகாமிற்கு வரு கின்றனர். அவர்களுக்கு பொறுமை யாக நாங்கள் பதில் சொல்லி அனுப்பி வருகிறோம். தமிழக அர சின் சார்பில் ஜனவரி மாத துவக் கத்தில் இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியாகலாம். அப் போது தமிழக அரசின் வழிகாட்டு தல் படி மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக பெண்கள் தங் களை பதிவு செய்து கொள்ளலாம். அதுவரை பெண்கள் பொறுமை யாக காத்திருக்க வேண்டும், என் றார். இதைத்தொடர்ந்து முகாமில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக தங்களுடைய விண்ணப்ப படிவங்களை அதிகா ரிகளிடம் வழங்கினர். பொதுமக்க ளுக்கு குடிநீர் வசதி, மாற்றுத்திற னாளிகள் வந்து செல்லும் வகை யில் அவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.