districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற அழைப்பு

ஈரோடு, ஜூலை 11- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத் தப்படும் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத் தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத் திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப் பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60  வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண் டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே  கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்ச மாக ரூ.15 இலட்சம் வரை கடனுதவி வழங்கப் படுகிறது. பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் மக்கள் கடனுதவிகள் பெற்று பயனடையுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி அழைப்பு விடுத்துள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து அதிமுக நகர செயலாளர் நில அபகரிப்பு  சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் 7 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம், ஜூலை 11- போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அப கரித்துக் கொண்ட அதிமுக நகர செயலா ளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி  மாணவி உட்பட 7 பேர் ஆட்சியர் அலுவல கம் அருகே தீக்குளிக்க முயற்சி செய்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சேலம் மாவட்டம் எடப்பாடி மசயந் தெரு  காட்டூர் பகுதியை சேர்ந்த செல்வம் அவரது மகள் பள்ளி மாணவி உட்பட குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே வந்தனர். அப்போது  மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனையை எடுத்து ஏழு பேரும் தலையில் உற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்து றையினர் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண் ணீர் ஊற்றி பாதுகாத்தனர்.  இதுகுறித் பாதிக்கப்பட்ட செல்வம் கூறும் போது, எனக்கு சொந்தமான 40 சென்ட் நிலம்  உள்ளது. அங்கு தான் வீடு கட்டி வாழ்ந்து  வருவதோடு, விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில் எனது 40 சென்ட் நிலத்தை அதிமுகவின் எடப்பாடி நகர செயலாளர் கேபிள் முருகன் என்பவர் போலியாக ஆவ ணம் தயாரித்து நிலத்தை அபகரித்துக் கொண்டார். இது குறித்து கேட்டதற்கு நகர செயலாளர் முருகன் அடியாட்களுடன் வந்து  எங்களை பயங்கரமாக தாக்கி, கொலை மிரட் டில் விடுத்தார். மேலும் தனது மகள் பள் ளிக்கு செல்லும்போது பல்வேறு விதங்களில் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். இது குறித்து எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிருக்கு பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளதால் வாழ்வதை விட சாவதே மேல் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தோம் என்றனர்.  மேலும், காவல் துறையினர் அதிமுக நகர செயலாளர் மீது  நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை மீட்டு  தர வேண்டும் என்றும், உயிருக்கு பாதுகாப்பு  அளிக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க  தெரிவித்தனர். இதனையடுத்து, காவல் துறையினர் நகர காவல் நிலையத்திற்கு அவர் களை அழைத்துச் சென்று தொடர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய மாணவர் சங்கம்  தெற்கு தாலுகா மாநாடு

திருப்பூர் ஜூலை 11- இந்திய மாணவர் சங்கதின் திருப்பூர் தெற்கு தாலுகா மாநாடு பி.ஆர். நிலையத்தில் நடைபெற்றது.  இம்மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சுதா  தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்  மோகன  ப்ரியா வரவேற்றார். அஞ்சலி தீர்மானம்  மகா வாசித்தார். மாவட்ட துணை தலைவர்  கல்கி ராஜ் துவக்க  உரையாற்றினார்.  வேலையறிக்கையை மாவட்ட துணை தலைவர் ஷாலினி முன் வைதார்.   இதையடுத்து தலைவராக சீனு, செயலாள ராக  மோகன ப்ரியா உட்பட 15 பேர் கொண்ட தாலுகா குழு  அமைக்கப்பட்டது. மாவட்ட துணை செயலா ளர்  பாலமுரளி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து  உரையாற்றினார்.

26 பேருக்கு கொரோனா

திருப்பூர், ஜூலை 11– திருப்பூரில் திங்கள்கி ழமை ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. தமிழகத்தில் திங்களன்று  ஒரே நாளில் 2448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 26  பேர் தொற்றுக்கு ஆளாகி யுள்ளனர். ஏற்கெனவே 160 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். எனவே தற்போது 166 பேர்  சிகிச்சை பெற்று வருகின்ற னர். தொற்று பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு மாவட்ட நிர் வாகம் கேட்டுக் கொண்டுள் ளது.

காமராஜர் நூலுக்கு  நிதி ஒதுக்கீடு: பி.ஆர்.நடராஜனுக்கு நன்றி

திருப்பூர், ஜூலை 11 - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் எ. கோபண்ணா எழுதிய ‘காம ராஜர் ஒரு சகாப்தம்’ என்ற  நூலை பள்ளி, கல்லூரி நூல கங்களுக்கு வழங்க கோவை  எம்.பி. பி.ஆர்.நடராஜன் தனது நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து ரூ.2 லட்சம் நிதி  ஒதுக்கினார். அவருக்கு திங் களன்று மங்கலத்தில் காம ராஜ் நினைவு மன்றம் மற்றும்  காங்கிரஸ் கட்சி முன்னாள் மங்கலம் ஊராட்சித்  தலைவர் வே.முத்துராம லிங்கம் சார்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவிக் கப்பட்டது.

பள்ளி மாணவர்கள்  கற்களை வீசி மோதல்

திருப்பூர் ஜூலை 11- திருப்பூர் ரயில் நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் கற் களை வீசி மோதல். தடுக்க முயன்ற நபரையும் மாணவர்கள்  தாக்கியதால் உடன் சென்ற நபர்கள் மாணவர்களை தாக்கிய  காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் குமார் நகர் பிஷப் பள்ளியைச் சேர்ந்த  மாணவர்களுக்கும் திருப்பூர் ரயில் நிலையம் அருகே பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் திங்களன்று பிஷப் பள்ளி மாணவர்களும் நஞ்சப்பா பள்ளி மாணவர்களும்  ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனை  கண்ட நபர் ஒருவர் மாணவர்களை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் தடுக்க முயன்றவரையும் அவருடன் வந்த நபர்களையும் துரத்தி தாக்கி உள்ளனர். சிறிது தூரம் ஓடிய நபர்கள்  அந்த பகுதியில் இருந்த கட்டைகளை எடுத்து மாணவர்களை  திரும்பி தாக்கி உள்ளனர். இதயடுத்து தகவலறிந்து விரைந்து  சென்ற திருப்பூர் வடக்கு காவல்துறை மாணவர்களில் சிலரை  பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று பெற்றோரை  வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். இந்த தாக்குதல் சம்ப வத்தை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத் துள்ளனர். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

ஓபிஎஸ் படத்தை கிழித்து கோவையில் அதிமுகவினர் போராட்டம்

கோவை, ஜூலை 11–  அதிமுக என்கிற பேரியக்கம் தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுண்டதால், கோவையில் திங்க ளன்று இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் படத்தை கிழித்தும், கால ணிகள் கொண்டு அடித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப் படத்தினர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் சூடுபிடித்து, அது பின் னர் பொதுச்செயலாளர் யார் என்கிற விவகாரம் தீவிரமடைந் தது. திங்களன்று நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்த அனு மதியளித்த நிலையில்  சென்னையில் அதிமுகவினர் ஒருவரை ஒருவர் மாறிமாறி அடித்துக்கொண்டனர். இதில், பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் அதிமுக தலைமை  அலுவலகம் முன்பு போர்க்களம் போல் கட்சியளித்தது. இந்நி லையில் ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவல கத்தில் இருந்த கோப்புகளை எல்லாம் எடுத்துச்சென்றதாக தகவல் பரவியது. தொடர்ந்து அதிமுக அலுவலகம் முன்பு  நடைபெற்ற கலவரம் காரணமாக அதிமுக அலுவலகத்தை ஆர்டிஓ தலைமையில் அலுவலர்கள் பூட்டி சீல்வைத்தனர். இதனிடையே மாநிலம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் அணி யினர் அவரவர் அணிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இன்ஒருபகுதியாக அதிமுகவின் கோவை மாவட்ட தலைமை அலுவலகமாக இதயதெய்வம் மாளிகையில் எடப் பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை அகற்றியும், அதனை உடைத்தும், காலில் போட்டு மிதித்தும் அவமரியாதை செய்தனர்.  மேலும், இபிஎஸ்சுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம்  பரபரப்பு ஓஏற்பட்டது.

ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

கோவை, ஜூலை 11- ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கான இடைத்தேர் தல் கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், செவ்வாயன்று (இன்று) வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத் தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், குருநல்லிபாளை யம் 4 ஆவது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1 ஆவது வார்டு, நல்லட்டிபாளையம் ஊராட்சி 4 ஆவது வார்டு உறுப்பினர் ஆகிய இடங்கள் காலியானது. இதேபோல பொள்ளாச்சி வடக்கு, வடக்கிப்பாளையம் ஊராட்சி 2 ஆவது வார்டு உறுப் பினர், பேரூர் செட்டிப்பாளையம் 1 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகள் காலியானது. காலியாக உள்ள பதவி இடங்க ளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நல்லட்டி பாளையம், சொக்கனூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் நெ.10 முத் தூர் ஊராட்சி தலைவர் மற்றும் குருநல்லிபாளையம், வடக் கிப்பாளையம், பேரூர் செட்டிப்பாளையம் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு ஜூலை 9 ஆம் தேதியன்று தேர்தல் நடை பெற்றது. வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னி லையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன்பின் நெ.10 முத்தூர், குருநெல்லிப்பாளையம் பதிவான வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வடக்கிப்பாளையத்தில் பதிவான வாக் குகள் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தி லும், பேரூர் செட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டி கள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.  வாக்கு எண்ணும் மையங்களில் செவ்வாயன்று (இன்று)  வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணுவதற்கு மேஜைகள் போடப்பட்டு உள்ளது. ஒரு மேஜைக்கு 3 பேர் என 2 மேஜைகளுக்கு 6 பேர் பணிபுரி வார்கள். ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணி யின் போது வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு நபர் என 2  பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல வார்டு  உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது. வாக்கு எண்ணும் பணியை பார் வையிட வரும் போது, செல்போன், பேனா, நோட்டு கொண்டு  வர அனுமதி இல்லை என தேர்தல் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  கோவை, ஜூலை 11-  மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனி யார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஜூலை 12 ஆம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.  இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதா வது,கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனா ளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான சிறப்பு தனியார் துறை  வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்கிடு வதற்கான சிறப்பு முகாம் 12 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் தனியார் துறை நிறு வனங்கள் நேர்காணல்கள் நடத்தி தங்கள் நிறுவனங்க ளுக்கு ஆட்சேர்ப்பு செய்யவுள்ளனர். இந்த சிறப்பு முகா மில் 18 வயதிற்கு மேல் 40 வயதிற்கு உள்ளான 8 ஆம்  வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தங்களின்  விவரங்களை 8925513701, 8925513717, 8925801463, 9080750139 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து  கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

கோவை, ஜூலை 11-  கோவையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி திங்களன்று நடைபெற்றது. உலக மக்கள் தொகை தினமான ஜூலை 11 ஆம் தேதியன்று விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார். கோவை ரேஸ்கோர்ஸ் சாலை சுகாதார துறை அலுவலகம் முன்பு விழிப்புணர்வு பேரணி துவக்கியது. முன்னதாக, பெண் சிசு கொலைகள் தடுப்போம், தாய் சேய் நலம் காப்போம் உள்ளிட்ட பதாகைகளை பேரணியில் பங்கேற்றவர்கள் கைகளில் பிடித்திருந்தனர். இதில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.\

மின்தடை

ஈரோடு, ஜுலை 11- சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்புப்பணி வரும் புதனன்று நடைபெற உள் ளது. இதனால் பெருந் துறை கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும் பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரி யூர், ஊத்துக்குளி ரோடு,  ஈங் கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக் கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், முருங்கத்தொழுவு மற்றும் எம்.பி.என்.நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின்விநி யோகம் இருக்காது என அறி விக்கப்பட்டுள்ளது.