உதகை, மே 26- கோத்தகிரியில் முட்டைக்கோஸ் செடிகளை நோய் தாக்கியதால் விளைச் சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவ சாயிகள் பெரும் கவலை அடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதி களவில் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கறிகள் உள் ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய் கறி மண்டிகளுக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படு கின்றன. அங்கிருந்து மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வரு கிறது. கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா, கதவுத் தொரை, கட்டபெட்டு குடுமனை, காக்கா சோலை, குருக் குத்தி, காவிலோரை, மிளிதேன், நெடு குளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக் கோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு வரு கிறது. முட்டைக்கோஸ் பயிர்கள் வழக்க மாக 90 நாட்கள் முதல் 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஒரு கிலோ முட்டைக்கோஸ் பயிரிட 6 ரூபாய் முதல் 7 ரூபாய் மூலதன செலவு தேவைப்படும். ஆனால், தற்போது காய் கறி மண்டிகளில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சிய டைந்து கிலோவுக்கு 4 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படு கிறது. இதன் காரணமாக அதைப்பயி ரிட்ட விவசாயிகளுக்கு கொள்முதல் செலவு கூட கிடைக்காமல், பெரும் நட் டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், விதை மற்றும் உரம், இடுபொருட் கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் நடமாட் டம் உள்ளிட்ட இன்னல்களை எதிர் கொண்டு, வங்கிக்கடன் பெற்று விவசா யம் செய்து வருகிறோம். முட்டைக் கோஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.15க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட் டுமே விவசாயிகளுக்கு ஓரளவிற்கு கட் டுப்படியாகும். கடந்தாண்டு முட்டைக் கோஸ் கிலோ ரூ.30க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்க ளாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு தற்போது 6 முதல் 7 ரூபாய்க்கு மட்டுமே கொள் முதல் செய்யப்படுகிறது. இது மட்டு மின்றி கடந்த சில ஆண்டுகளாக முட்டைக் கோஸ் பயிர்கள் அறுவடைக்கு தயா ராகும் நேரத்தில் புது வகையான நோய் தாக்குதல் ஏற்பட்டு அதன் இலைகள் பழுக்கத் தொடங்கி தோட்டம் முழுவ தும் பரவி விடுகிறது. எனவே அதனைக் கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயங்குகின்றனர். மேலும், சாதரணமாக கொள்முதல் விலை குறையும் நேரத்தில் முட்டைக் கோசை 10 நாட்கள் வரை வைத்திருந்து விலை உயரும் போது விற்பனை செய்ய முடியும். ஆனால், நோய் தாக்குதல் கார ணமாக அவ்வாறு செய்ய முடிவ தில்லை. எனவே, விவசாயிகள் நலன் கருதி தோட்டக்கலை துறை அதிகாரி கள் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.