நாமக்கல், ஆக.10- ராசிபுரம் பகுதிகளில், வளர்ச் சித் திட்டப்பணிகள் தொடக்க விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதி வேந்தன் பங்கேற்றார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம், நாச்சிப் பட்டி, ஓ.சவுதாபுரம், பழந்தின்னிப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வளர்ச் சித் திட்டப்பணிகள் தொடக்க விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் ரூ.66.24 லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டடங் களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். வெண்ணந்தூர் ஒன்றியம், ஓ.சவுதாபுரம் ஊராட்சி யில், ரூ.13.57 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்ட டம், ராசாபாளையம் கிராமத்தில் ரூ.18.95 லட்சத்தில் புதியதாக கட் டப்பட்டுள்ள தானிய கிடங்கு, பழந் தின்னிப்பட்டி ஊராட்சியில் ரூ.20.15 லட்சத்தில் புதியதாக கட்டப்பட் டுள்ள தானிய கிடங்கு, நாச்சிப்பட்டி ஊராட்சியில் ரூ.13.57 லட்சம் புதிய தாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.66.24 லட் சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டிடங்களை அமைச்சர் மதி வேந்தன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குநர் வடிவேல், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.