கோவை, ஜூன் 6- 15 சதவிகித ஓய்வூதிய மாற் றத்தை உடனடியாக வழங்க வலி யுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வூதி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். பென்சன் மாற்றத்தை 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்க வேண்டும். டிஇ லிங்கில் உள்ள காலதாமதத்தை களைந்திட வேண்டும். டிஓடி தொலைத்தொடர்பு துறையின் மீதான அதிகாரத்தை கைவிட வேண்டும். முடக்கப்பட்ட ஐடிஏ மீண்டும் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் முன்வைக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மேட்டுப்பாளையம் சாலை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு வியாழனன்று நடைபெற்றது. இதில், பிஎஸ்என் எல் ஓய்வூதியர்கள், கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும் பின்னர் அமைச்சருக்கு தபால் அனுப் பினர். இதில், சங்கத்தின் நிர்வாகி கே. சந்திரசேகர் தலைமை ஏற்றார். இதில், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் மற்றும் டிஓடி பென்சன் ஊழியர் கள் மாவட்ட பொறுப்பு செய லாளர் பி.நிசார் அகமது, பென்சன் அசோசியேசன் செயலாளர் வெங் கட்ராமன், எஸ்என்பிடபிள்யுஏ மாவட்டச் செயலாளர் டி.செந்தூர பாண்டியன், பிடிஏபிஏ மாவட்ட தலைவர் கே.ஆர்.பழனிசாமி மற்றும் மகுடேஸ்வரி, பிரசன்னா உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தருமபுரி
இதேபோல்,பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கங்களின் இணைப் புக்குழு சார்பில் தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆர்.கோபாலன் தலைமை ஏற்றார். மாவட்ட செய லாளர் டி.பாஸ்கர் கோரிக்கை களை விளக்கி பேசினார். பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன், எஸ்என்பிடபிள்யு (ஏ) மாவட்ட செய லாளர் எம்.தமிழ்செல்வி உள்ளிட்ட திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோல்,மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி சங்கத்தின் பெருந்துறை தொலை பேசி நிலைய வளாகத்தில் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த நிர்வாகி எஸ்.என்.மயில்சாமி தலைமை ஏற்றார். மாவட்ட சிறப்பு அழைப்பாளர் சி.மணி மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மாநில செயலர் எம்.சையத் இத்ரீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிளை செய லர் ஏ.ஈஸ்வரன் நன்றி கூறினார்.