திருப்பூர், செப்.15- செப்டம்பர் 13 ஆம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைப்பி டிக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பு சார்பில் உலக எழுத்தறிவு தின புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம், கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதி யாக சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் புத்தக கண்காட்சி மற்றும் வாசிப்பு இயக்கம் நடத்தப் பட்டது. இதில் திரளான மாணவர்கள் கதை, அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாங்கி பயனடைந்தனர்.