districts

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் முற்றுகை

திருப்பூர், ஜூன் 26- திருவிக நகரில் முறையாக குடிநீர் விநி யோகம் செய்யப்படாததைக் கண்டித்து செவ் வாயன்று அப்பகுதி பெண்கள் காலிக்குடங்க ளுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், காங்கயேம் நக ராட்சி, 1 ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவிக  நகரில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கிறோம். இந்நிலையில் கடந்த சில தினங் களாக முறையாக குடிநீர் விநியோகம் செய் யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிக ளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் பெண்கள் காலிக் குடங்களுடன் காங்கேயம் நகராட்சி  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.  இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் நகராட்சி நிர்வாகத்தினர் பேச் சுவார்த்தை நடத்தினர். மேலும், தண்ணீர் பிரச் சனை உடனடியாக சரி செய்வதாகவும் உறுதி யளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.