districts

img

குழந்தைகளை அச்சுறுத்திய பாஜக போலிச்சாமியார்

ஈரோடு, மார்ச் 13- பவானி அருகே பாஜக போலி சாமி யாரிடமிருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்க போராட்டம் அறி வித்ததால் போலிச்சாமியார் கைது செய் யப்பட்டார். ஈரோடு மாவட்டம், பவானி அருகே  ஊராட்சிக் கோட்டை, தொட்டிபாளை யம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் போலிச் சாமியார் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வருவதாக புகார்  எழுந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத் தினர் கேட்டதற்கு நாங்கள் பாஜகவில் இருக்கிறோம். ஆர்எஸ்எஸ்ல் இருக்கி றோம் எனக் கூறி மிரட்டி வந்தனர்.  இதன் உச்சமாக, குழந்தைகளுக்கு சூடு வைப்பது, பெல்டால் அடிப்பது, செருப்பு காலால் உதைப்பது போன்ற சித்ரவதைகளை தொடர்கதையாகி வந்தது. வெயிலில் குழந்தைகள் மயக் கமடையும் வரை நிற்க வைத்ததும் தெரி யவந்தது.  இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட  ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் அறி விக்கப்பட்டது. இதற்கிடையில், ஆர்ப் பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பாஜகவினர் திட்டமிட்டே தகராரில் ஈடு பட முயன்றனர். ஆனால், வாலிபர் சங் கத்தினர், போலி சாமியாருக்கு ஆதர வாக ரகளையில் ஈடுபடும் பாஜகவி னரை அக்கூட்டத்திலேயே அம்பலப்ப டுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க  செயலாளர் கோபாலகண்ணன் தலைமை வகித்தார். மாநில பொருளா ளர் பாரதி, மாவட்ட செயலாளர் வி. ஏ.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினர். சகோதர சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.