districts

img

69 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த பவானிசாகர் அணை

ஈரோடு, ஆக.19- ஈரோடு மாவட்டத்தில் உள்ள  பவானிசாகர் அணை 69 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத் துள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் அமைந் துள்ள பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் 2ஆவது மிகப் பெரிய மண் அணையாகும். இந்த  அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும்  கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47  லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறு கின்றன. அணையின் கரையின் நீளம் 8.78 கி.மீட்டர். கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம் 200 கி. மீட்டர். பிரதான கால்வாயில் இருந்து 800 கி.மீ. நீளத்திற்கு கிளை  வாய்க்கால்கள், 1,900 கி.மீ நீளத் திற்கு பகிர்மான வாய்க்கால்களும் அமைக்கப்பட்டுள்ளன. 1948ஆம் ஆண்டு பவானி ஆறு,  மாயாறு சேரும் இடத்தில் ரூ.10.50  மதிப்பில் பவானிசாகர் அணை கட்டுமான பணி தொடங்கப்பட்டது. தொழில் நுட்ப இயந்திரங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன. சுமார் ஏழு  ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான  பணிகள் முடிந்து, 1955 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று அப் போதைய முதல்வர் காமராஜர் அணையை திறந்து வைத்தார்.  வரலாற்றுப் பெருமை வாய்ந்த  பவானிசாகர் அணை ஆக.19 தேதி யன்று 68 ஆண்டுகளை நிறைவு செய்து 69 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த அணையில் ஆற்று மதகு கள் 9, கீழ்பவானி வாய்க்கால் மதகு கள் 3, உபரி நீர் செல்லும் மதகுகள்  9 என 21 மதகுகள் உள்ளன. இதில்  பவானி ஆற்று மதகுகளில் வெளி யேற்றப்படும் நீரில் 8 மெகாவாட்  மின்சாரம், கீழ்பவானி வாய்க் காலில் 8 மெகாவாட் மின்சாரம் என  16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பவானிசாகர் அணை 1955 ஆம்  ஆண்டு திறக்கப்பட்ட நிலையில், 1957ஆம் ஆண்டு முதல் முறையாக  அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து பல முறை முழு கொள்ளளவு எட்டி உள்ளது. கடந்த வருடம் 2022 ஆம்  ஆண்டு வரை மொத்தம் 22 முறை  பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 68 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பவானிசாகர் அணை  கம்பீரமாக காட்சியளிக்கிறது.