districts

img

நம்பிக்கை நூலகத்தில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு, செப். 22- அந்தியூர் நம்பிக்கை நூலகத்தில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அந்தியூர் நம்பிக்கை நூலகம் சார்பில் மகாகவி பாரதி யார் நினைவு தினத்தை முன்னிட்டு அந்தியூர் பேரூராட் சிக்குட்பட்ட 6 முதல் 12 வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி  மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது. கவிதை, கட்டுரை, ஓவியம், சிறுகதை உள்ளிட்ட போட்டிகளில் மாணவ செல்வங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதன் முடிவுகள் புதனன்று அறிவிக்கப்பட்டது. வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அந்தியூர் நூற்றாண்டு விழா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நூலக புரவலர்கள் மருத்துவர் எஸ்.கவிதா, தலைமையாசிரியர் பானுமதி, விளையாட்டு ஆசிரியர் திருமாவளவன், காதர்ஹைதர் கான்,  நிர்வாகிகள்  எல்.சேகர், எஸ்.கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரு பால் ஆசிரியர் பெருமக்கள், மகிழ்ச்சியாக பள்ளி மாணக் கர்கள் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றி தழ்களைப் பெற்றுச் சென்றனர்.

;